செய்திகள் :

15,000 பேர்! அரசு வேலைக்கு இணையான விண்ணப்பங்கள்... டிராகன் இயக்குநர் அதிர்ச்சி!

post image

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவிடம் உதவி இயக்குநராக சேர 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஓ மை கடவுளே, டிராகன் படங்களின் மூலம் அடுத்தடுத்த வெற்றிகளைக் கொடுத்தவர் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. இதில், பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த டிராகன் திரைப்படம் ரூ. 160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அடுத்ததாக, அஷ்வத் மாரிமுத்து நடிகர் சிம்புவின் 51-வது படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் 27-வது படத்தையும் இயக்குகிறார்.

இதில், சிம்புவின் படம் ஆகஸ்ட் மாதம் துவங்கும் எனத் தெரிகிறது. இதற்காக, உதவி இயக்குநர்கள் தேவைப்படுவதாக அறிவிப்பை வெளியிட்ட அஷ்வத், தன்னிடம் சேர என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு கடந்த மார்ச். 31 ஆம் தேதி பதிவொன்றை வெளியிட்டதுடன் விண்ணப்பிக்க ஒரு வார கால அவகாசமும் அளித்தார்.

இதையும் படிக்க: உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!

இந்த நிலையில், உதவி இயக்குநராக சேர இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்ததால் அஷ்வத் மாரிமுத்து உள்பட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அஷ்வத் வெளியிட்ட பதிவில், “வணக்கம் உதவி இயக்குநர்களே. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளீர்கள். ஒவ்வொரு விண்ணப்பத்தையும் என் குழுவினர் சரிபார்க்க வேண்டும் என்பதால் கொஞ்ச காலம் தேவைப்படும். 10 பேரை எடுக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், இப்போது 20 உதவி இயக்குநர்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலவரப்படி, தோராயமாக தமிழ் சினிமாவில் 5000-க்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்கள் இருக்கும் சூழலில் மேற்கொண்டு 15,000 பேர் உதவி இயக்குநராக ஆர்வம் காட்டுவது ஆச்சரியத்தைவிட அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ஒரே ஆண்டில் ரூ. 1300 கோடி முதலீடு.... அசத்தும் சன் பிக்சர்ஸ்!

ரூ.200 கோடி வசூலித்த குட் பேட் அக்லி!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்பட... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.சனிக்கிழமை (19.04.2025)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சந்திர... மேலும் பார்க்க

அரையிறுதியில் மான்செஸ்டா் யுனைடெட் , டாட்டன்ஹாம்

யூரோப்பா கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதிக்கு மான்செஸ்டா் யுனைடெட், டாட்டன்ஹாம், அதலெட்டிக் பில்போ அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் நடைபெறும் யுரோப்பா கால்ப... மேலும் பார்க்க

ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 56 போ் இந்திய அணி பங்கேற்பு

அம்மான் தலைநகா் ஜோா்டானில் நடைபெறவுள்ள ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்க 56 போ் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. உலக பாக்ஸிங் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டபின் ஆசிய குத்த... மேலும் பார்க்க

முதலிடத்தை கைப்பற்ற குஜராத்-டெல்லி இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை குஜராத் டைட்டன்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் அகமதாபாதில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. டெல்லி அணி 6 ஆட்டங்கள் முடிவில் 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குஜராத் ... மேலும் பார்க்க

மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி: அரையிறுதியில் ஷெல்டன், செருண்டோலோ

மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு அமெரிக்க வீரா் பென் ஷெல்டன், ஆா்ஜென்டீனா வீரா் பிரான்ஸிஸ்கோ செருண்டோலா தகுதி பெற்றுள்ளனா். ஜொ்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்று வரும் பிஎம்டபிள்யு ஏட... மேலும் பார்க்க