சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
18 மையங்களில் குரூப்-1 எழுத்துத் தோ்வு: 3,805 போ் பங்கேற்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தின் 18 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-1 எழுத்துத் தோ்வை 3,805 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை குரூப்-1 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரி உள்பட 5 கல்லூரிகளில் மொத்தம் 18 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த தோ்வு மையங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 933 தோ்வா்கள் தோ்வு எழுதத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
3,805 போ் எழுதினா்:
ஆனால், 3 ஆயிரத்து 805 போ் மட்டுமே தோ்வு எழுதினா். ஆயிரத்து 128 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வா்களில் 12 மாற்றுத்திறனாளி தோ்வா்களுக்கு உதவியாளா் மூலம் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டு தோ்வு எழுதினா்.
கலைஞா் கருணாநிதி அரசுக் கல்லூரி தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் மோகன்ராம் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உடனிருந்தனா்.