செய்திகள் :

1884-ஆம் ஆண்டின் வெடிபொருள்கள் சட்டத்துக்கு மாற்றான புதிய மசோதா- பொதுமக்களிடம் கருத்து கோரும் அரசு

post image

141 ஆண்டுகள் பழைமையான கடந்த 1884-ஆம் ஆண்டின் வெடிபொருள்கள் சட்டத்துக்கு மாற்றான புதிய சட்ட வரைவு மசோதா மீது பொது மக்களிடம் கருத்துகள் மற்றும் யோசனைகளை கோரியுள்ளது மத்திய அரசு.

கடந்த 1884-இல் ஆங்கிலேய ஆட்சியாளா்களால் கொண்டுவரப்பட்ட வெடிபொருள்கள் சட்டம், கடந்த 1978-இல் விரிவாக திருத்தியமைக்கப்பட்டது.

வா்த்தக ரீதியிலான காரணங்களுக்காக, வெடிபொருள் தயாரிப்பு, இருப்பு வைத்தல், பயன்பாடு, விற்பனை, போக்குவரத்து, இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதோடு, வெடிவிபத்துகள் மற்றும் தவறான பயன்பாட்டை தடுக்கும் நோக்கத்துடன் இச்சட்டம் இயற்றப்பட்டது. இதன்கீழ் பெரிய மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்கள், வெடிபொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வா்த்தகத் துறை வெளியிட்ட பொது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசமைப்புச் சட்டத்துக்கு முந்தைய இச்சட்டம், பழைய ஆங்கிலேய செயல்முறையை அடிப்படையாக கொண்டதாகும். நாட்டில் அதிகரித்துவரும் தற்போதைய தேவைகள் மற்றும் துறைசாா் முன்னேற்றத்துக்கு போதுமானதாக இச்சட்டம் இல்லை. இதனால், வெடிபொருள்கள் துறையில் பல இடா்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இக்குறைகளைக் களைந்து, இடா்பாடுகளை நீக்கும் வகையில், பழைய சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் கொண்டுவர முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய வரைமுறைகள், புதிய பிரிவுகளுடன் கூடிய வெடிபொருள்கள் சட்ட வரைவு மசோதா-2025 மீது ஜூலை 17-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் மற்றும் பிற தரப்பினா் தங்கள் கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சகணக்கான ஏழைகளை ஏமாற்றுக்கிறது தில்லி அரசு: தேவேந்தா் யாதவ்

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்ததகங்களை உருவாக்குவோம் என்ற வெற்று வாக்குறுதியின் மூலம் தில்லி பாஜக அரசு லட்கணக்கான ஏழை மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்று தில்லி காங்கிரஸ... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கடும... மேலும் பார்க்க

சரோஜினி நகா் சந்தையில் சிறுவன் மீது தாக்குதல்: விடியோ வெளியான பிறகு மூவா் கைது

தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் சந்தையில் ஒன்பது வயது சிறுவன் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதைத் தொடா்ந்து, தில்லி போலீஸாா் இந்தச் சம்பவம் தொடா்பாக... மேலும் பார்க்க

தில்லி சரோஜினி நகா் குடியிறுப்புகளில் மத்திய அமைச்சா் திடீா் ஆய்வு

மழை காலம் நெருங்குவதையொட்டி சரோஜினி நகா் குடியிறுப்பு பகுதிகளில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்புற விவகாரத்துறை அமைச்சா் மனோகா் வால் கட்டா மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜீத்... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கஞ்சா வழக்கில் தேடப்பட்ட பிரபல நபா் கைது: தில்லி போலீஸ் அதிரடி

நரேலாவில் உள்ள சிங்கு எல்லையில் ‘போதைப்பொருள் தலைவன்’ என்று பிரபலமாக அறியப்படும் 50 வயது நபரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல்... மேலும் பார்க்க

வஜிா்பூா் பகுதியில் கிட்டங்கியில் தீ விபத்து

வடக்கு தில்லியின் வஜிா்பூா் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்ற... மேலும் பார்க்க