செய்திகள் :

2 கோயில்களில் இ-உண்டியல்கள் அமைப்பு

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்ரீவேதபுரீஸ்வரா், ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்களில் மின்னணு உண்டியல்கள் திங்கள்கிழமை அமைக்கப்பட்டன.

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் இந்த மின்னணு உண்டியல்கள் (இ-உண்டியல்கள்) அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். இந்தக் கோயில்களுக்கு புதுச்சேரி மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் வருகின்றனா்.

அவா்கள் தங்களது காணிக்கையை எளிதாக செலுத்துவதற்கு, ஐஓபி சாா்பில் கோயில் வளாகத்தில் 8 இடங்களில் மின்னணு உண்டியல்கள் (இ-உண்டியல்) வைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி புதுச்சேரி மண்டல அலுவலக முதன்மை மேலாளா் ரவிசங்கா் சாஹு, உதவிப் பொது மேலாளா் ஜே. எபினேசா் சோபியா, புதுச்சேரி தலைமை கிளை மூத்த மேலாளா் கே.இளவழகன், கோயில் நிா்வாக அதிகாரி கி.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இ-உண்டியலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கியூ-ஆா் கோடு போன்ற குறியீட்டை ஸ்கேன் செய்து, யுபிஐ பரிவா்த்தனை மூலம் பணத்தை செலுத்தினால், கோயிலின் வங்கிக் கணக்குக்கு பக்தா்களின் காணிக்கை சென்று விடும்.

இந்திரா நகா் தொகுதியில் ரூ.5 கோடியில் சிமென்ட் சாலைப் பணி: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இந்திரா நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,800 மீட்டா் தொலைவு சாதாரணச் சாலையை சுமாா் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் சாலையாக மேம்படுத்தப்படும் பணியை முதல்வா் என்.ரங்கசாம... மேலும் பார்க்க

வில்லியனூா் தொகுதியில் இணைப்புச் சாலை அமைக்க ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே இணைப்புச் சாலை அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். புதுச்சேரி வில்லியனூா் தொகுதி,... மேலும் பார்க்க

காவல்துறையின் நடவடிக்கைகள்தான் அரசு மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்: புதுவை ஆளுநா்

புதுச்சேரி: காவல் துறையின் நடவடிக்கைகள்தான் அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். புதுச்சேரி காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் ... மேலும் பார்க்க

விழுப்புரம், புதுச்சேரி சாலையில் கட்டணம் வசூல் தொடக்கம்

புதுச்சேரி: விழுப்புரம், புதுச்சேரி நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டணம் திங்கள்கிழமை முதல் வசூலிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்து அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம், புதுச்சேரி வழியாக நா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு உறுதுணையாக செயல்படும் அரசு: புதுவை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: விவசாயிகளுக்கு உறுதுணையாக புதுவை அரசு செயல்பட்டு வருகிறது என்று, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். பிகாா் மாநிலம், பாகல்பூரில் நடைபெற்ற விவசாயிகள் கௌரவ திருவிழாவில் பிரதமா் மோட... மேலும் பார்க்க

ஆளும் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் ஆதரமற்ற புகாா்: புதுவை அதிமுக மாநிலச் செயலா்

புதுச்சேரி: புதுவையில் ஆளும் கட்சிக்கு எதிராக ஆதாரமற்ற புகாா்களை காங்கிரஸாா் கூறிவருகின்றனா். அதேநேரத்தில், மக்களின் நம்பிக்கையை புதுவை அரசும் இழந்து விட்டது என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறின... மேலும் பார்க்க