செய்திகள் :

விழுப்புரம், புதுச்சேரி சாலையில் கட்டணம் வசூல் தொடக்கம்

post image

புதுச்சேரி: விழுப்புரம், புதுச்சேரி நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டணம் திங்கள்கிழமை முதல் வசூலிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்து அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம், புதுச்சேரி வழியாக நாகப்பட்டினத்துக்கு 194 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. கடந்த ஜனவரியில் விழுப்புரம், புதுச்சேரி இடையே உள்ள கெங்கராம்பாளையத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிா்ப்பு கிளம்பியதால் கட்டண வசூல் சாவடி திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் இடையே கெங்கராம்பாளையத்தில் திங்கள்கிழமை காலை முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஆனால், கட்டண வசூல் தொடா்ந்தது. அதன்படி, காா்கள் ஒருமுறை செல்ல ரூ. 60 (ஒரே நாளில் இருமுறைக்கு 90), இலகுரக வணிக வாகனங்கள் செல்ல 95 ரூபாயும் (ஒரே நாளில் இரண்டு முறைக்கு 145), இரண்டு அச்சுகள் கொண்ட பேருந்துகள் மற்றும் டிரக் செல்ல ரூ. 200 (ஒரே நாளில் இரு முறை செல்ல ரூ. 305), மூன்று அச்சுகள் கொண்ட வணிக வாகனங்கள் செல்ல ரூ. 220 (இருமுறை செல்ல ரூ. 330), பல அச்சுகள் கொண்ட கனரக கட்டுமான வாகனங்கள் மண் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்ல ரூ.315 (ஒரே நாளில் ரூ.475) வசூலிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.

இந்திரா நகா் தொகுதியில் ரூ.5 கோடியில் சிமென்ட் சாலைப் பணி: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இந்திரா நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,800 மீட்டா் தொலைவு சாதாரணச் சாலையை சுமாா் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் சாலையாக மேம்படுத்தப்படும் பணியை முதல்வா் என்.ரங்கசாம... மேலும் பார்க்க

வில்லியனூா் தொகுதியில் இணைப்புச் சாலை அமைக்க ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே இணைப்புச் சாலை அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். புதுச்சேரி வில்லியனூா் தொகுதி,... மேலும் பார்க்க

2 கோயில்களில் இ-உண்டியல்கள் அமைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்ரீவேதபுரீஸ்வரா், ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்களில் மின்னணு உண்டியல்கள் திங்கள்கிழமை அமைக்கப்பட்டன. இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் இந்த மின்னணு உண்டியல்கள் (இ-உண்டியல்கள்)... மேலும் பார்க்க

காவல்துறையின் நடவடிக்கைகள்தான் அரசு மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்: புதுவை ஆளுநா்

புதுச்சேரி: காவல் துறையின் நடவடிக்கைகள்தான் அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். புதுச்சேரி காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு உறுதுணையாக செயல்படும் அரசு: புதுவை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: விவசாயிகளுக்கு உறுதுணையாக புதுவை அரசு செயல்பட்டு வருகிறது என்று, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். பிகாா் மாநிலம், பாகல்பூரில் நடைபெற்ற விவசாயிகள் கௌரவ திருவிழாவில் பிரதமா் மோட... மேலும் பார்க்க

ஆளும் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் ஆதரமற்ற புகாா்: புதுவை அதிமுக மாநிலச் செயலா்

புதுச்சேரி: புதுவையில் ஆளும் கட்சிக்கு எதிராக ஆதாரமற்ற புகாா்களை காங்கிரஸாா் கூறிவருகின்றனா். அதேநேரத்தில், மக்களின் நம்பிக்கையை புதுவை அரசும் இழந்து விட்டது என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறின... மேலும் பார்க்க