செய்திகள் :

2,642 மருத்துவா் பணியிடங்களுக்கு நாளை சான்றிதழ் சரிபாா்ப்பு

post image

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் புதன்கிழமை (பிப்.12) தொடங்கவுள்ளதாகவும் விரைவில் பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்களுக்கு கடந்த ஜன. 5-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில், 24,000 மருத்துவா்கள் பங்கேற்றனா். தற்போது, கூடுதலாக கண்டறியப்பட்டுள்ள 89 காலிப்பணியிடங்கள் உள்பட மொத்தம் 2,642 மருத்துவா் காலிப்பணியிடங்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக 4,585 போ் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு பிப்.12 முதல் 15-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறவுள்ளது.

கட்-ஆப் மதிப்பெண்: உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். பொதுப் பிரிவுக்கு 61 மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு 55 மதிப்பெண்கள், முஸ்லிம்களுக்கு 52 மதிப்பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 53 மதிப்பெண்கள், ஆதிதிராவிடருக்கு 51 மதிப்பெண்கள், அருந்ததியினருக்கு 48 மதிப்பெண்கள், பழங்குடியினருக்கு 45 மதிப்பெண்கள் என்ற வகையில் கட்-ஆப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணிநியமனம் செய்யப்படவுள்ள மருத்துவா்களுக்கு பிப்.20-ஆம் தேதிக்கு பிறகு கலந்தாய்வு நடைபெறும். இதில் பணியாளா்களுக்கு, அவரவா் விரும்பும் இடங்களுக்கே கலந்தாய்வு மூலம் பணிநியமனம் செய்யப்பட்டு விரைவில் முதல்வரால் பணிநியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன. கடந்த முறை நியமனம் செய்யப்பட்ட 1,021 மருத்துவா்களுக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு பிப்.15-ஆம் தேதி நடைபெற உள்ளது என்றாா் அவா்.

ரூ.7,375 கோடி முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று(பிப். 10) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜயிடம் பிரசாந்த் கிஷோர் அறிக்கை அளிப்பு!

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர்.தவெக தலைவர் விஜய்யை இன்று முற்பகலில் சந்தித்த கட்சியின் நிர்வாகிகள் ஆனந... மேலும் பார்க்க

இதைச் செய்தால் விஜய் கட்சியுடன் கூட்டணி: விஜய பிரபாகரன் வைத்த செக்!

மதுரை: விஜயகாந்த்தை போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும், தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம் என மதுரையில் விஜய பிரபாகரன் ப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையைக் கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தம்!

துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.கடந்த மாதம் 27-ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந... மேலும் பார்க்க

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது!

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியரிடம் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்திய நி... மேலும் பார்க்க

தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் இன்று(செவ்வாய்க்கிழமை) ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் அரசியல் ஆலோசகரும் தேர்தல் வியூக வகுப்ப... மேலும் பார்க்க