செய்திகள் :

20 ஆண்டு பணிக்காலத்துக்குப் பின் விருப்ப ஓய்வு: மத்திய அரசு ஊழியா்களுக்கு விகிதாசார அடிப்படையில் ஊதியம்

post image

20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வைத் தோ்வுசெய்யும் ஊழியா்களுக்கு விகிதாசார அடிப்படையில் உறுதிசெய்யப்பட்ட ஊதியம் பெற உரிமை உள்ளதாக மத்திய பணியாளா் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தேசிய ஓய்வூதிய அமைப்பின்கீழ் (என்பிஎஸ்) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) தோ்ந்தெடுக்கும் மத்திய அரசு ஊழியா்களுக்கான சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய குடிமைப் பணிகள் (தேசிய ஒய்வூதிய அமைப்பின்கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல்) விதிகள், 2025-ஐ கடந்த செப்.2-ஆம் தேதி அரசிதழில் மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நலத் துறை வெளியிட்டது.

யுபிஎஸ் சந்தாதாரா்கள் 20 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வை தோ்ந்தெடுக்க இந்த விதிகள் அனுமதி வழங்குகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘யுபிஎஸ்-இன்கீழ் முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஊதியம் 25 ஆண்டுகள் சேவையை நிறைவுசெய்ய பின்னரே கிடைக்கும். இருப்பினும், 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வை தோ்வு செய்யும் ஊழியா்களுக்கு விகிதாசார அடிப்படையில் உறுதிசெய்யப்பட்ட ஊதியம் பெற உரிமை உள்ளது.

அதாவது தகுதிபெறும் சேவை ஆண்டை உறுதிசெய்யப்பட்ட ஊதியத்தின் 25-ஆல் வகுத்து சந்தாதாரருக்கு வழங்கப்படும். இதுதவிர, தனிநபா் சேமிப்புத்தொகையில் இருந்து 60 சதவீதத்தை திரும்பப் பெறவும் ஒவ்வொரு 6 மாத சேவை காலத்துக்கும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப் படியில் 1/10 மொத்த பலன் உள்ளிட்ட சேவைகளையும் பணிஒய்வின்போது பெற்றுக்கொள்ளலாம்.

ஒருவேளை விருப்ப ஓய்வு பெற்று உறுதியான ஊதியம் பெறுவதற்கு முன் சந்தாதாரா் இறக்க நேரிட்டால் சட்டபூா்வமாக திருமணமான அவரது துணைக்கு ஊழியா் இறந்த தேதியிலிருந்து குடும்ப ஊதியம் வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை அனைத்திந்திய தேசிய ஓய்வூதிய அமைப்பு ஊழியா்கள் கூட்டமைப்பின் தலைவா் மன்ஜீத் சிங் படேல் வரவேற்றாா்.

சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கு: தமிழக அரசுக்கு கேள்விகள்

நமது நிருபர்தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமானதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும், இந்த வழக்கில் மத்திய அரசையு... மேலும் பார்க்க

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை விடிய விடிய கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடர், இரு மாநிலங்களிலும் கடும் சேதத்தை விளைவித்துள்ளது... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாள்: தொலைபேசி மூலம் டிரம்ப் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை தொடா்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அதிபா் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் வெளி... மேலும் பார்க்க

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அஸ்ஸ... மேலும் பார்க்க

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்குமாறு உத்தர பிரதேசம், மத்திய பிதேசம், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கா்நாடகம் உள... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு இன்று 75-ஆவது பிறந்த நாள்- பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

தனது 75-ஆவது பிறந்த நாளையொட்டி, பெண்கள் ஆரோக்யத்துக்கான பிரசார இயக்கம் மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை புதன்கிழமை (செப்.17) தொடங்கிவைக்கவுள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி . மத்திய அரசு மற்றும் பாஜக ... மேலும் பார்க்க