செய்திகள் :

2024-ல் 383 நிவாரணப் பணியாளர்கள் கொலை! இது வெட்கக்கேடு: ஐநா காட்டம்!

post image

2024-ம் ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் 383 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், இது சர்வதேச அக்கறையின்மையின் “வெட்கக்கேடான குற்றச்சாட்டு எனவும், ஐக்கிய நாடுகளின் சபை அறிவித்துள்ளது.

காஸா, சூடான் போன்ற போர் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மக்களுக்கு உதவிச் செய்யும் நிவாரணப் பணியாளர்களின் மீதான தாக்குதல்கள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் மட்டும் 383 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், இது 2023 ஆம் ஆண்டின் பலி எண்ணிக்கையை விட 31 சதவிகிதம் அதிகம் எனவும் ஐ.நா. சபை இன்று (ஆக.19) தெரிவித்துள்ளது.

இதில், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் அங்கு பணியாற்றிய நிவாரணப் பணியாளர்கள் 181 பேரும், சூடானில் சுமார் 60 பேரும் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உள்நாட்டு பணியாளர்கள் என்றும் அவர்களில் சிலர் பணியின்போதும் மற்றும் சிலர் அவர்களது வீட்டிலும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, சுமார் 308 நிவாரணப் பணியாளர்கள் படுகாயமடைந்ததுடன், 125 பேர் கடத்தப்பட்டுள்ளனர். மேலும், 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

நிவாரணப் பணியாளர்களின் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி, நிகழாண்டு (2025) ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை, 265 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து, ஐநா நிவாரணப் பணிகளின் தலைவர் டாம் ஃப்ளெட்சர் கூறியதாவது:

“எந்தப் பொறுப்பும் இல்லாமல், இந்த அளவிலான தாக்குதல்கள், சர்வதேச செயலற்றதன்மை மற்றும் அக்கறையின்மைக்கு எதிரான வெட்கக்கேடான குற்றச்சாட்டாகும்.

அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்கள் மனிதநேயத்திற்காகச் செயல்பட வேண்டும். மக்களை பாதுகாப்பதோடு, தொழிலாளர்களுக்கும் உதவ வேண்டும், குற்றவாளிகளைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும், இவை அனைத்தையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.

இதேபோல், ஐநாவின் உலக சுகாதார நிறுவனம், நிகழாண்டில் (2025) மட்டும் 16 பிரதேசங்களில் சுமார் 800 சுகாதாரப் பணிகளின் மீது நடைபெற்ற தாக்குதல்களில், 1,110-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கஜகஸ்தான் ராணுவத்தில் புதியதாக செய்யறிவு பிரிவு உருவாக்கம்!

The United Nations has declared that 383 aid workers were killed in 2024 alone, calling it a “shameful indictment” of international apathy.

கஜகஸ்தான் ராணுவத்தில் புதியதாக செய்யறிவு பிரிவு உருவாக்கம்!

கஜகஸ்தான் ராணுவப் படைகளை நவீனமாக்க, புதியதாகச் சிறப்பு செயற்கை நுண்ணரிவு பிரிவு உருவாக்கப்படுவதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கஜகஸ்தான் ராணுவத்தின் ஆயுதப் படைகளின் டிஜிட்... மேலும் பார்க்க

பயணிகள் விமானத்தில் தீ! 36,000 அடி, 40 நிமிட பயணம்! பத்திரமாக தரையிறக்கியது எப்படி?

கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் நடுவானில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விமானத்தை பத்திரமாக விமானிகள் தரையிறக்கினர்.கிரீஸ் நாட்டின் கோர்ஃபு விமான நிலையத்தி... மேலும் பார்க்க

ரஷிய எண்ணெய் கொள்முதல் போருக்கான நிதியுதவி..! இந்தியா மீது டிரம்ப் ஆலோசகர் தாக்கு!

ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வது, உக்ரைன் மீது நடத்தப்படும் போருக்கான நிதியுதவி என இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.இந்த... மேலும் பார்க்க

ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுக்கு தயார்: உக்ரைன் அதிபர்

ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.ரஷியா - உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியி... மேலும் பார்க்க

போர் நிறுத்த முதல்படி..! அமைதிப் பேச்சுவார்த்தை பணிகளைத் தொடங்கிய டிரம்ப்!

ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இருவரும் விரைவில் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இடையேயான பேச்சுவ... மேலும் பார்க்க

62 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க