செய்திகள் :

2025 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது!

post image

2025 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆா்எஸ் உள்ளிட்ட 24 வகையான குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.

ஆண்டுக்கு ஒருமுறை இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் நடப்பு ஆண்டுக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.

காலியாகவுள்ள 979 பணியிடங்களுக்கு இன்று(ஜன. 22) முதல் பிப். 11 ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிக்க | பரந்தூருக்குப் பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் அமைக்கலாம்! - அன்புமணி ராமதாஸ்

முதல்நிலைத் தேர்வு வருகிற மே 25 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

யுபிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதள பக்கமான upsc.gov.in-இல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெண்கள்/எஸ்சி/எஸ்டி உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மற்றவர்கள் ரூ. 100 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

21 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க யுபிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதள பக்கமான upsc.gov.in-இல் அணுகலாம்.

திரிணமூல் காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ மரணம்

மாரடைப்பால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமது மரணமடைந்தார். கலிகஞ்ச் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமதுவுக்கு சனிக்கிழமை இரவு 11:50 மணியள... மேலும் பார்க்க

சம்பல் வன்முறை: மேலும் ஒருவர் கைது

சம்பல் வன்முறை தொடா்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்திரா கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் ககு சராய் பக... மேலும் பார்க்க

குஜராத்: பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 5 பேர் பலி; 37 பேர் படுகாயம்

குஜராத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ஒருவரைக் கொன்ற மாவோயிஸ்டுகள்

மகாராஷ்டிரத்தில் காவலர்களுக்கு துப்பு கொடுப்பவர் எனக் கூறி ஒருவரை மாவோயிஸ்டுகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகராஷ்டிர மாநிலம், தெற்கு கட்சிரோலியில் உள்ள பம்ரகத் தெஹ்சில், கியர் கிராமத... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புதித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தி நிகழ்வுக்கு உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியது இதுவே ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

ஜாசத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 8 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மாவட்டத்தின் கங்களூா் காவல் நிலையத்தின் எல்லைக்குள்பட்ட வனப்பகுதியில் ... மேலும் பார்க்க