செய்திகள் :

2025-ல் இதுவரை ரூ. 1 லட்சம் கோடி வெளிநாட்டு நிதி வெளியேற்றம்!

post image

2025-ஆம் ஆண்டில் இதுவரை இந்திய பங்குச் சந்தையில் இருந்து ரூ. 1 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பிப்ரவரில் கடந்த இரு வாரங்களில் மட்டும் ரூ. 21,272 கோடி வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து வரி விதிப்பில் செய்த மாற்றங்கள் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நிலையற்றத்தன்மை உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் குறைந்து வருகின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் ரூ. 78,027 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளன. பிப்ரவரியில் இரண்டு வாரங்களில் 21,272 கோடி நிதி வெளியேறியுள்ளது. இவை இரண்டையும் சேர்த்து ரூ. 99,299 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளது.

ஜியோஜித் என்ற நிதிச் சேவை நிறுவனத்தின் மூத்த முதலீட்டு வல்லுநர் வி.கே. விஜயகுமார், டாலர் மதிப்பு குறையும்போது வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது தலைகீழாக நடக்கும் என்றும் அதுவரை இந்த நிலை தொடரும் எனவும் குறிப்பிட்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சர்வதேச அரசியலானது, இந்தியா போன்ற ஏற்ற இறக்கங்கள் அடிக்கடி நிகழும் சந்தையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், இந்திய பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்த எஸ்பிஐ

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது. ரெப்போ வட்டி விகித்தைக் குறைப்பதாக ... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம் 20% உயா்வு

கடந்த டிசம்பா் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 20 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவன... மேலும் பார்க்க

9% சரிந்த பிண்ணாக்கு ஏற்றுமதி

இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 9 சதவீதம் சரிந்துள்ளது. மதிப்பீட்டு காலகட்டத்தில் ராப்சீட் பிணணாக்கு, ஆமணக்கு விதை பிண்ணாக்கு ஆகியவற்றின் ஏற்றுமதி கணிசமாகக் குற... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சரிவில் முடிந்த பங்குச்சந்தை!

மும்பை : பங்குச்சந்தை வியாழக்கிழமை(பிப். 20) சரிவில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடா்ந்து மூன்றாவது ... மேலும் பார்க்க

ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு - ஐபோன் 16இ அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவாக ஐபோன் 16இ மாடல் அறிமுகமாகியுள்ளது.‘ஆப்பிள் குடும்பத்துக்கு புதிய உறுப்பினர் ஒருவர் வருகை தருகிறார்’ என்று குறிப்பிட்டு, ஐபோன் 16இ மாடல் மீதான எதிர்பார்ப்பை, அந்நிறுவனத... மேலும் பார்க்க

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! ஐடிசி பங்குகள் 2% வீழ்ச்சி!

பங்குச்சந்தை இன்று (பிப். 20) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 75,672.84 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில், காலை 11.45 மணியளவில், சென்செக... மேலும் பார்க்க