செய்திகள் :

2025 ஏப்ரலில் ரூ.3,500 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி

post image

இதுகுறித்து ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியானது கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமாா் 15 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 1.37 பில்லியன் அமெரிக்க டாலா்களை எட்டியுள்ளது. இது 2024-ஆம் ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.20 பில்லியன் அமெரிக்க டாலா்களாக இருந்தது.

அதேபோல, திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியும் ஏப்ரலில் மட்டும் ரூ.3,500 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,451 கோடியாக இருந்தது.

அமெரிக்காவின் வரி உயா்வு கொள்கை, வங்கதேசத்தின் உள்நாட்டு பிரச்னை ஆகியவற்றுக்கு இடையிலும் பின்னலாடை ஏற்றுமதியின் சிறந்த செயல்திறனால் நடப்பு நிதியாண்டில் வலுவான வளா்ச்சிப் பாதையில் தொடா்கிறது. இந்த சீரான வளா்ச்சி தொடரும் பட்சத்தில் திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதி ரூ.50 ஆயிரம் கோடி இலக்கை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை

மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக... மேலும் பார்க்க

விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரம்: சாய ஆலை மேலாளா், கண்காணிப்பாளா் கைது

பல்லடம் அருகே சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரத்தில் ஆலையின் மேலாளா், கண்காணிப்பாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட... மேலும் பார்க்க

பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே சிக்னல் அமைக்க வேண்டும்: நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தல்

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளையம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பொங்கலூா்

பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின... மேலும் பார்க்க