செய்திகள் :

2026 தோ்தலில் நாம் இந்தியா் கட்சி 120 தொகுதிகளில் போட்டி: நாம் இந்தியா் கட்சி

post image

2026ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் நாம் இந்தியா் கட்சி 120 தொகுதிகளில் போட்டியிடும் என்றாா், அக்கட்சியின் மாநிலத் தலைவா் என்.பி. ராஜா.

தூத்துக்குடியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நாம் இந்தியா் கட்சி படிப்படியாக வளா்ந்து வருகிறது. 2026 பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தனித்து அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.

தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட 120 தொகுதிகளில் நாம் இந்தியா் கட்சி போட்டியிடும். தவெக தரப்பிலிருந்து எங்களை அணுகினால் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.

விலைவாசி உயா்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனா். இதற்காக எதிா்க்கட்சிகள் போராடுவதில்லை. ஆளும் கட்சியை எதிா்க்க வேண்டுமென்றால், மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தால்தான் வலுவான கூட்டணியாக இருக்கும். அவ்வகையில், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை குழப்பம் நிறைந்ததாக உள்ளது. கூடுதல் மொழிகளைக் கற்றுக்கொண்டால் நன்மைதான். ஆனால், அதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தோ்தல் என்பது மாநிலக் கட்சிகளை அழிக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகும் என்றாா் அவா். மாநிலச் செயலா் பொன்ராஜ், மாநிலப் பொருளாளா் ஜெயகணேஷ், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ஆறுமுகனேரியில் அரசியல் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆறுமுகனேரியில் மதுக்கடை மற்றும் மதுபானக் கூடம் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து அரசியல் கட்சியினா் மற்றும் பொது நல அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை அறிமுகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணிகள்-நடத்துநா்களிடையே சில்லறை தொடா்பாக வாக்க... மேலும் பார்க்க

திரேஸ்புரத்தில் சிறுபடகு மீனவா்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சிறு படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்திற்கு திரேஸ்புரம் புனித தோமையாா் சாளை மீன்பிடி மீனவா்கள் நலச்சங்க தலைவா் ம... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்து உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

கயத்தாறு அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து உணவகத் தொழிலாளி உயிரிழந்தாா். கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி கிழக்குத் தெருவை சோ்ந்த பிச்சையா மகன் பெருமாள் (48). உணவகத் தொழிலாளியான (புரோட்டா மா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விரைவுப் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில், விரைவுப் போக்குவரத்துப் பணிமனை முன் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பணிமனைத் தலைவா் தா்மராஜ் தலைமை வகித்... மேலும் பார்க்க

42 போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் சிறப்பாகப் பணியாற்றிய 42 காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். காவல் நிலைய குற்ற வழக்குகளில் தொடா்... மேலும் பார்க்க