செய்திகள் :

25% + 25%... இந்தியா மீதான ட்ரம்பின் வரி இன்று முதல் அமல்; பாதிப்புகள் என்னென்ன?

post image

ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தக விவகாரத்தில் இந்தியா ஈடுபடக் கூடாது என்று கூறிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த ஜூலையில் இந்திய பொருள்கள் மீது 25 சதவிகித வரி விதித்தார்.

அதைத்தொடர்ந்து, இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்தப் போவதாகக் கூறிவந்த ட்ரம்ப் இந்த மாத தொடக்கத்தில் (ஆகஸ்ட் 6), ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக ஏற்கெனவே இருந்த 25 சதவிகித வரி மீது கூடுதலாக 25 சதவிகித வரி விதிப்பதாக அறிவித்தார்.

மோடி, ட்ரம்ப்
மோடி, ட்ரம்ப்

இந்த அபராத வரி அடுத்த 21 நாள்களில் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனால், பிரேசிலுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவால் 50 சதவிகித வரிவிதிப்புக்குள்ளான நாடானது இந்தியா.

இந்த நிலையில் ட்ரம்ப் அறிவித்தபடி இந்திய பொருள்கள் மீதான 50 சதவிகித வரி இன்று (ஆகஸ்ட் 27) காலை 09:30 மணி முதல் அமலுக்கு வருகிறது.

இதனால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 87.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களில் கிட்டத்தட்ட பாதி பொருள்கள் ட்ரம்பின் 50 சதவிகித வரிக்கு உள்ளாகும்.

குறிப்பாக, ஜவுளி, நகைகள், கடல் உணவுகள், தோல் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் பாதிப்புக்குள்ளாகும்.

வரி
வரி

அதோடு, ஏராளமான இந்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் பணிநீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

அதேசமயம், அமெரிக்காவுக்கு முக்கிய மருந்து சப்ளையாராக இந்தியா இருப்பதால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருள்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் மின்னணு பொருள்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

PM MODI-யின் கல்வி தகுதியை இனி யாரும் கேட்கக்கூடாதா? Imperfect Show | 26.08.2025 Stalin

மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் போட்டி. * தமிழகத்தில் 35,000 விநாயர்கள் சிலைகள் நாளை அமைப்பு? * பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேச்சுக்கு தமிழி... மேலும் பார்க்க

"அடுத்தநாள் கூப்பிடுங்கள் என்றேன்; 5 மணிநேரத்தில்..." - மோடியுடன் பேசியதைப் பகிர்ந்த ட்ரம்ப்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் முடிவுக்கு வந்தபோது அதனை முதலில் அறிவித்தவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.அதைத்தொடர்ந்து, "இந்தியா பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்த... மேலும் பார்க்க

மாதச் சம்பளத்திலிருந்து பாதுகாப்பு வரை... குடியரசு துணைத் தலைவருக்கான சிறப்பு சலுகைகள் என்னென்ன?!

இந்திய அரசியலமைப்பின் படி, குடியரசுத் தலைவருக்கு அடுத்தபடியாக உயர்ந்த பதவி வகிப்பவர் துணை குடியரசுத் தலைவர் ஆவார். அதே சமயம் ராஜ்ய சபாவின் தலைவராகவும் துணை குடியரசு தலைவர் பதவில் இருப்பவர்கள் செயல்படு... மேலும் பார்க்க

``காலை உணவில் புழு, பல்லி கிடக்கிறதே, இதுதான் திராவிட மாடலின் சாதனையா?'' - நயினார் நாகேந்திரன்

நகர்புற அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு காலை உணவு திட்ட விரிவாக்கத்தை இன்று (ஆகஸ்ட் 26) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில... மேலும் பார்க்க

காஸா மருத்துவமனை மீது தாக்குதல்; 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி - நெதன்யாகு சொல்வதென்ன?

இஸ்ரேல் - காஸா போர் இஸ்ரேல் - காஸாவுக்கு இடையே தொடர்ந்துவரும் போரில் நாளுக்கு நாள் நிலமை கொடூரமாகிக்கொண்டே இருக்கிறது. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் முக்கிய சுகாதார மையமான நாசர் மருத்துவமனை மீது ... மேலும் பார்க்க