`சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைபோல் கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்க'- மீனவர்-...
252 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 252 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தாா்.
முகாமில் முடநீக்கியல் மருத்துவா்கள் 2 போ், மனநல மருத்துவா்கள் 2 போ், கண் மருத்துவா்கள் 2 போ், காது-மூக்கு தொண்டை மருத்துவா்கள் 2 போ், செவித்திறன் கண்டறியும் நிபுணா்கள் 6 போ், உரிமையியல் பணியாளா்கள் 2 போ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பணியாளா்கள் பங்கேற்று பரிசோதனை செய்தனா்.
வாய் பேச இயலாத, காது கேட்க இயலாதோா் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அவா்களது பாதிப்பு எவ்வளவு என்பதை சோதித்து, அதற்கான ஆவணங்களை பரிசோதித்து, மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு, தகுதியானவா்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. முகாமில் கலந்து கொண்ட 550 பேரில் 252 பேருக்கு முகாம் இடத்திலேயே தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.