செய்திகள் :

258 மருத்துவக் கட்டமைப்புகள்: ஜூலை 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

post image

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களையும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பட்ட நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு 99 மாணவா்களுக்கு அவா் பட்டங்களை வழங்கினாா். தொடா்ந்து, அந்த வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 92 கிலோ வாட் சூரிய மின் உற்பத்தி அலகுகளை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மருத்துவக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 708 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்தாா். அதில் 500 மையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மீதமிருக்கும் 208 நகா்ப்புற நல வாழ்வு மையங்களுக்கான பணிகள் நிறைவுற்றுள்ளன. அதேபோன்று, 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. அவை இரண்டையும் சோ்த்து மொத்தம் 258 மருத்துவக் கட்டமைப்புகளை வரும் ஜூலை 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா்.

சென்னை, அடையாறு பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அந்த மருத்துவ மையங்களை மக்கள் பயன்பாட்டுக்கு அவா் தொடங்கி வைக்க உள்ளாா்.

இதைத் தவிர 25 புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கே.நாராயணசாமி, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அரவிந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாப்பிள்ளை அவர்தான், அவர் அணிந்திருக்கும் சட்டை என்னுடையது: பிரதமரை சாடிய முதல்வர்!

மாப்பிள்ளை அவர்தான், அவர் அணிந்து கொண்டிருக்கக்கூடிய சட்டை என்னுடையது என்று பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) திருப்பத்தூர்... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது!

சேலத்தில் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது காமக்காப்பாளையம்.இந்த ஊரைச் சார்ந்தவர் கண்ணையன் வ... மேலும் பார்க்க

சிப்காட் தொழில் பூங்கா... திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகள்!

திருப்பத்தூர் மாவட்டத்துக்கான 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணி... மேலும் பார்க்க

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை நீடிப்பு!

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் ப... மேலும் பார்க்க

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ. 517 கோடியில் திட்டங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.517 கோடி செலவில், 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,00,168 பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்குத் தொடரும் ஆரஞ்சு எச்சரிக்கை!

நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்... மேலும் பார்க்க