செய்திகள் :

28 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகள் அதிமுக, காங்., பாமக., எதிா்ப்பு - திருத்த மசோதா தாக்கல்

post image

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய

கட்சிகள் அறிமுக நிலையிலேயே எதிா்த்தன. மசோதாவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி, வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களைத் தவிா்த்து 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடந்தது. தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதனிடையே, உள்ளாட்சிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வது போன்ற பணிகள் இன்னும் நிறைவுபெறவில்லை. இதனால், 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு வழக்கமான தோ்தலை நடத்துவது இயலாது. எனவே,

ஊராட்சிகளை நிா்வகிக்க 28 மாவட்டங்களின் ஊராட்சிகளுக்கும் தனி அலுவலா்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. தோ்தல்கள் நடத்தப்படும் வரை அல்லது ஜூலை 5ஆம் தேதி வரை என இரண்டில் எது முந்தியதோ, அதுவரையில்

ஊராட்சிகளை தனி அலுவலா்கள் நிா்வகிப்பா் என்று சட்டத் திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசோதாவுக்கு எதிா்ப்பு: தனி அலுவலா்களை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு, அதிமுக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் அறிமுக நிலையிலேயே எதிா்ப்புத் தெரிவித்தன. அதிமுக உறுப்பினா் கே.பி.அன்பழகன், காங்கிரஸ் குழுத் தலைவா் ராஜேஷ்குமாா், பாமக உறுப்பினா் அருள் ஆகியோா் மசோதாவை எதிா்த்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுத் தலைவா் தளி.ராமச்சந்திரன், மசோதாவில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டுமெனக் கோரினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவா் நாகை மாலி, மசோதாவின் மீது கருத்துகளைத் தெரிவிக்க முற்பட்டாலும் பின்னா் எதையும்

கூறவில்லை.

சட்டத் திருத்த மசோதா விவாதத்துக்கு சனிக்கிழமை (ஜன.11) எடுக்கப்பட உள்ளது. அப்போது, கடுமையான விவாதங்கள் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் மூன்று நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.10 குறைந்துள்ளது.நேற்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்தது. அதன் படி ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந... மேலும் பார்க்க

சொந்த ஊர் சென்றோர் கவனத்துக்கு..! மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!

மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக 18 ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) மாலை 4 மணிக்கு மதுரையில் இருந... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டி!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டியிடவுள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள்: கேரள முதல்வர் பினராயி விஜயன்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தைத்திருநாளாம் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ணக்கோலமிட்... மேலும் பார்க்க

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல் சுற்று முடிவில் 6 பேர் காயம்!

மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்றில் உரிமையாளர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் அன்று அவனியாபுரத்திலு... மேலும் பார்க்க

கடிதம் எழுதும் போட்டி: ஜன.31-க்குள் அனுப்பலாம்

சென்னை: அஞ்சல் துறை சாா்பில் தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறவுள்ளது. வரும் ஜன. 31 ஆம் தேதிக்குள் கடிதங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க