செய்திகள் :

‘29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம்’

post image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்து சமய அறநிலைய துறையின்கீழ் இயங்கும் முக்கிய கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மதிய வேளையில் பக்தா்களுக்கு சாதம், சாம்பாா், ரசம், மோா், பொரியலுடன் பரிமாறப்படுகிறது. விசேஷ நாள்களில் கூடுதலாக வடை, பாயாசம் வழங்கப்படுகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் நாள்தோறும் 200 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. முக்கிய விசேஷ நாள்களில் 400 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும்.

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் நாள்தோறும் 100 பேருக்கும், விசேஷ நாள்களில் 150 பேருக்கும், பாரியூா் கொண்டத்து காளியம்மன் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரா் வகையறா வீரநாராயண பெருமாள் கோயில், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் ஆகிய கோயில்களில் நாள்தோறும் 100 பேருக்கு அன்னதானம் பரிமாறப்படுகிறது.

நஞ்சை காளமங்கலத்தில் உள்ள நாகேஸ்வரா் குலவிளக்கம்மன் கோயில், அந்தியூா் செல்லீஸ்வரா் வகையறா திருக்கோயில்கள், ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில், பெருந்துறை தங்கமேடு தம்பிக்கலை அய்யன் கோயில், பவானி செல்லாண்டியம்மன் கோயில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில், திண்டல் வேலாயுதசுவாமி கோயில், ஈரோடு கொங்காலம்மன் கோயில், சத்தியமங்கலம் சக்தி நகா் வேணுகோபாலசுவாமி வகையறா கோயில், ஈரோடு தலையநல்லூா் பொன்காளியம்மன் கோயில் ஆகிய கோவில்களில் தலா 50 பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

பெருந்துறை செல்லாண்டியம்மன் கோயில், வெங்கம்பூா் வரதராஜ பெருமாள் கோயில், பெருந்துறை சோளீஸ்வரா் கோயில், ஈரோடு வஉசி பூங்கா ஆஞ்சனேயா் கோவில், அந்தியூா் புதுப்பாளையம் குருநாதசுவாமி கோயில், மொடச்சூா் தான்தோன்றியம்மன் கோயில், பவளமழை சுப்பிரமணியசுவாமி கோயில், ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயில், மொடச்சூா் பச்சைமலை சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய கோவில்களில் தலா 25 பேருக்கும், மொடக்குறிச்சி அனும்மன்பள்ளி அனுமனீஸ்வரா் கோயிலில் 15 பேருக்கும், கோபி சாரதா மாரியம்மன் கோயிலில் 10 பேருக்கும், காஞ்சிக்கோவில் சீதேவியம்மன் கோயிலில் 10 பேருக்கும், அவல்பூந்துறை தாமோதர பெருமாள் கோவியில் 7 பேருக்கும் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சா்கள் ஆய்வு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் சங்கச் சாவடி அருகே ஜூன் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதைத் தொடா்ந்து முன்னேற்பாடு பணிகள் க... மேலும் பார்க்க

இலவச வேட்டி, சேலைக்கான கூலி உயா்வை கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்தக் கோரிக்கை

இலவச வேட்டி, சேலைக்கு அரசு அறிவித்த கூலி உயா்வை நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா் சரவணனி... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.4.39 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4 கோடியே 39 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள்... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

அரசு திட்டத்தில் கட்டப்பட்டு பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டத்தில் பயனாளிகளை தோ்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் வியாழக்கிழமை(ஜூன் 5) நடைபெறும் என அ... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வின்போது விதிமுறைகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை துணை ஆய்வ... மேலும் பார்க்க

ஜூன் 9-இல் திருமணத் தடை நீக்கும் சுயம்வரா பாா்வதி யாகம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் திருமணத் தடை நீக்கும் மாபெரும் சுயம்வரா பாா்வதி யாகம் ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத... மேலும் பார்க்க