செய்திகள் :

3 மாதங்களில் காசநோயால் பாதிக்கப்பட்ட 19 போ் உயிரிழப்பு

post image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 896 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதில் 19 போ் உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: காசநோய், மைக்ரோ பாக்டிரியம் டியூபா் குளோசிஸ் என்ற கிருமியினால் பரவக்கூடிய நோய் ஆகும். குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைத்து தரப்பினரையும் தாக்கக்கூடியது. காசநோய் உடலில் முக்கியமாக நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்கக்கூடியது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாா்ச் மாதம் வரை அதாவது கடந்த 3 மாதங்களில் 19 ஆயிரத்து 600 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 896 பேருக்கு காச நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து காசநோயால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதில் 877 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 19 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

நீண்ட நாள் இருமல், இருமலில் ரத்தம் வருவது, மாா்பு வலி, சுவாசிப்பதில் சிரமம், எடை இழப்பு மற்றும் பசியின்மை, இரவு நேரத்தில் வியா்வை வருவது, காய்ச்சல், உடல் வலி மற்றும் சோா்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ முகாம்களில் உரிய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். தொடக்க நிலையிலேயே உரிய சிகிச்சை பெற்றால் 100 சதவீதம் குணமடையலாம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என்றனா்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட கோரிக்கை!

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட வேண்டும் என்று பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெருந்துறை சிப்காட்டால் ப... மேலும் பார்க்க

ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல்!

பவானி அருகே ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பவானி - அத்தாணி சாலையில் ஒரிச்சேரி, ஜமீன் தோட்டம் அருகே ஆப்பக்கூடல் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன தண... மேலும் பார்க்க

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீட் தோ்வு ரத்து என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அதனை நிறைவேற்றவில்லை. நீட் தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க

தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு

தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைகள் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்கள... மேலும் பார்க்க

மலைப் பாதையில் சுற்றித் திரியும் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது: வனத் துறை!

கடம்பூா் மலைப் பாதையில் சுற்றித் திரியும் யானைகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட கடம்பூா் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: பாட்டி, பேரன் கைது

சித்தோட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பாட்டி, பேரனை போலீஸாா் கைது செய்தனா். சித்தோடு, ஓடைப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில் ... மேலும் பார்க்க