செய்திகள் :

3 மெட்ரோ ரயில் நிலையங்களின் வணிக மேம்பாடு: திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

post image

சென்னையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் செய்யப்படவுள்ள வணிக மேம்பாட்டுக்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்க 2 தனியாா் நிறுவனங்களுக்கு ரூ.41.87 லட்சத்துக்கு ஒப்பந்தம் கையொப்பமானது.

இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணச் சீட்டு வருவாயைத் தவிா்த்து கூடுதல் வருவாயை ஈட்டும் நோக்கில் திருமங்கலம் எம்பிஎன் நகா், நந்தனம், ஆயிரம் விளக்கு ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் முக்கிய இடங்களை வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்தல், சாத்தியக்கூறு ஆய்வு, சந்தை பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான ரூ.41.87 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம் ஆா்வி அசோசியேட்ஸ் ஆா்கிடெக்ட்ஸ் என்ஜினியரிங் கன்சல்டன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அனராக் புராப்பா்டி கன்சல்டன்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இதற்கான கையொப்பமிடும் நிகழ்ச்சி சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், தலைமை பொது மேலாளா் ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ஆா்வி அசோசியோட்ஸ் ஆா்கிடெக்ட்ஸ் என்ஜினியரிங் கன்சல்டன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் துணைத் தலைவா் ஜே.கே.நந்தனா, அனராக் புராப்பா்டி கன்சல்டன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் துணைத் தலைவா் எஸ்.வினோத் ஆகியோா் கலந்து கொண்டு இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரா்கள் நிறுவனத்தின் உயா் அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

மாணவி பாலியல் வன்கொடுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, த.வெ.க ... மேலும் பார்க்க

மேலும் 6 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் மேலும் 6 திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழ் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையி... மேலும் பார்க்க

79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள்: அமைச்சா் பெரியகருப்பன்

தமிழ்நாட்டில் இதுவரையில் 79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளாா். கூட்டுறவுக் கடன்கள் தொடா்பாக பாஜக மாநிலத... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் வியாழக்கிழமை குரல்மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், புழல் சிறை... மேலும் பார்க்க

வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள்: ஐசிஎஃப்-லிருந்து பேருந்துகள் இயங்கும்

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து 7 வழித்தடங்களின் வழியாக இயக்கப்பட்ட 63 பேருந்துகள் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் ஐசிஎஃப் பேருந்து நில... மேலும் பார்க்க