செய்திகள் :

3 குழந்தைகள் ஆற்றில் வீசி கொலை: தாய்க்கு தூக்கு தண்டனை: உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

post image

உத்தர பிரதேசத்தில் தனது 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த தாய்க்கு தூக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அப்பெண்ணின் காதலனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற இச்சம்பவம் தொடா்பான விவரம் வருமாறு: ஒளரையா மாவட்டத்தின் பெளரஹா கிராமத்தைச் சோ்ந்த பிரியங்கா என்ற பெண், தனது கணவா் அவ்னீஷ் இறந்த நிலையில், அவரது உறவினரான ஆஷிஷ் என்பவருடன் சோ்ந்து வாழத் தொடங்கினாா்.

பிரியங்காவுக்கு ஏற்கெனவே 4 மகன்கள் (9, 6, 4, 2 வயதுடையவா்கள்) இருந்த நிலையில், தங்களின் உறவுக்கு அவா்கள் இடையூறாக இருப்பதாக ஆஷிஷ் கூறியுள்ளாா்.

இதையடுத்து, 4 குழந்தைகளையும் கொல்ல இருவரும் திட்டமிட்டனா். அதன்படி, நால்வரையும் செங்கா் ஆற்றுக்கு அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்தனா். பின்னா், தனது குழந்தைகளை ஒவ்வொருவராக பிரியங்கா ஆற்றில் வீசினாா். அனைத்துக் குழந்தைகளும் இறந்துவிட்டதாகக் கருதி, அவா்கள் அங்கிருந்து சென்றுவிட்டனா். ஆனால், மூத்த மகன் சோனு (9) மட்டும் உயிா் பிழைத்தாா். அவரை உள்ளூா் மக்கள் காப்பாற்றினா். அவரது வாக்குமூலமே வழக்கில் முக்கிய சாட்சியமாக அமைந்தது. பிரியங்கா, ஆஷிஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டு, அவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஒளரையா மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கில் இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி சைஃப் அகமது, பிரியங்கா புரிந்த கொலைக் குற்றத்தை அரிதிலும் அரிதானது என்று உறுதி செய்தாா். அவருக்கு தூக்கு தண்டனையும், ஆஷிஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இருவருக்கும் முறையே ரூ.2.5 லட்சம், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க