செய்திகள் :

3 கொலைகள்; கோவை வெடி குண்டு வழக்கின் முக்கிய புள்ளி - 29 ஆண்டுகளுக்கு பிறகு கைதான டெய்லர் ராஜா

post image

கோவை மாவட்டத்தில், கடந்த 1998 பிப்ரவரி 14-ம் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 58 பொது மக்கள் உயிரிழந்தனர். 250 பேர் படு காயமடைந்தனர். தேர்தல் பரப்புரைக்காக வந்த பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொலை செய்வதற்காக நடத்தப்பட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குண்டு வெடிப்பு

இந்த கொடூர சம்பவத்தின் முக்கிய புள்ளியாக செயல்பட்ட டெய்லர் ராஜா என்பவர் 29 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.   

அல் – உம்மா தீவிரவாத இயக்கத்தின் தீவிர உறுப்பினராக உள்ள சித்திக் என்கிற டெய்லர் ராஜா கோவையை பூர்விகமாக கொண்டவர். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாவார். அடிப்படையில் டெய்லரான இவர் மீது கோவை, மதுரை, நாகூர் பகுதிகளில் கொலை வழக்குகள் உள்ளன.

கொலை

சிறை அதிகாரி, ஜெயிலர், ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை அவர் கொலை செய்துள்ளார். ராஜா தன் வீட்டில் வெடி குண்டை பதுக்கி, அதை அல் -உம்மா இயக்கத்தின் பல்வேறு நபர்களுக்கு விநியோகம் செய்துள்ளார்.

எந்த வழக்கிலும் சிக்காமல் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் அவரின் நடமாட்டம் இருப்பதாக தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல்துறையினர் அவரை கர்நாடகாவில் வைத்து கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்

காவல்துறை ஏற்கெனவே அபூ பக்கர் சித்திக், முகமது அலி என்கிற 2 முக்கிய தீவிரவாதிகளை அண்மையில் கைது செய்திருந்தனர். தற்போது டெய்லர் ராஜாவும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

பாமக: "என்னுடைய X, Facebook கணக்குகளை மீட்டுத் தாருங்கள்" - டிஜிபி-யிடம் ராமதாஸ் மனு

'பாமகவின் தலைவர் நானே' என்று கடந்த மாதம், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால், பாமக நிறுவனத் தலைவரும், பாமக தலைவரும் ராமதாஸின் மகனுமான அன்புமணிக்கு மோதல் போக்குத் தொடங்கியது.ராமதாஸ், தேர்த... மேலும் பார்க்க

``75 வயதாகிவிட்டால் ஒதுங்கியிருக்க வேண்டும்..." - மோகன் பகவத் பேச்சுக்கு காங்கிரஸின் ரியாக்‌ஷன்?

கடந்த புதன்கிழமை நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ``உங்களுக்கு 75 வயது ஆகிவிட்டது என்றால், நீங்கள் உங்கள் பொறுப்பில... மேலும் பார்க்க

மதிமுக: ``8 இடங்களிலாவது வெற்றிபெற வேண்டும் என்றால்..." - தொகுதிப் பங்கீடு குறித்து துரை வைகோ!

சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தொகுதிப் பங்கீடு குறித்தும், அதிமுக வைகைச்செல்வன் வைகோவை `வைகோ பொய்கோ' என விமர்சித்தது உள்ளிட்டப் பல்வேறு கேள்விகளுக்கு திருச்சி எம்.பி-யும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளருமான... மேலும் பார்க்க

`குப்பை டெண்டரில் கைமாறிய லஞ்சத்தால் புதுச்சேரியில் துர்நாற்றம் வீசுகிறது’ - அரசை சாடும் திமுக

புதுச்சேரி அரசுக்கு அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான சிவா, ``புதுச்சேரி முழுவதும் `ஸ்வச்தா கார்ப்பரேஷன்’ மூலம் குப்... மேலும் பார்க்க