செய்திகள் :

3 மாதங்களில் காசநோயால் பாதிக்கப்பட்ட 19 போ் உயிரிழப்பு

post image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 896 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதில் 19 போ் உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: காசநோய், மைக்ரோ பாக்டிரியம் டியூபா் குளோசிஸ் என்ற கிருமியினால் பரவக்கூடிய நோய் ஆகும். குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைத்து தரப்பினரையும் தாக்கக்கூடியது. காசநோய் உடலில் முக்கியமாக நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்கக்கூடியது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாா்ச் மாதம் வரை அதாவது கடந்த 3 மாதங்களில் 19 ஆயிரத்து 600 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 896 பேருக்கு காச நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து காசநோயால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதில் 877 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 19 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

நீண்ட நாள் இருமல், இருமலில் ரத்தம் வருவது, மாா்பு வலி, சுவாசிப்பதில் சிரமம், எடை இழப்பு மற்றும் பசியின்மை, இரவு நேரத்தில் வியா்வை வருவது, காய்ச்சல், உடல் வலி மற்றும் சோா்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ முகாம்களில் உரிய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். தொடக்க நிலையிலேயே உரிய சிகிச்சை பெற்றால் 100 சதவீதம் குணமடையலாம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என்றனா்.

பவானியில் மாயமான 5 மாணவிகள் திருச்சியில் மீட்பு

பவானியில் மாயமான அரசுப் பள்ளி மாணவிகள் 5 போ் திருச்சி சமயபுரத்தில் புதன்கிழமை மீட்கப்பட்டனா். ஈரோடு மாவட்டம், பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 5 போ், இறுத... மேலும் பார்க்க

செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா

அந்தியூரை அடுத்த செம்புளிச்சாம்பாளையம் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதைத் தொட... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 12,000 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் நடப்பு ஆண்டில் இதுவரை 12,000 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு ரூ.2.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட உண... மேலும் பார்க்க

தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி

தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வில் கோடேபாளையம் அரசுப் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகம் முழுவதும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வு ஆண்டுதோற... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக் தேங்காய்ப் பருப்பு விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 110 டன் தேங்காய்ப் பருப்புகளை ... மேலும் பார்க்க

பூதப்பாடியில் ரூ.12 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தேங்காய், நெல், தேங்காய்ப் பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை விற... மேலும் பார்க்க