செய்திகள் :

மாவட்டத்தில் 12,000 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் நடப்பு ஆண்டில் இதுவரை 12,000 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு ரூ.2.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் தங்க விக்னேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் மக்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைப்பதற்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், உணவு வளாக சோதனைகள், ஆய்வகப் பரிசோதனைகள் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சிறுதொழில் முதல் பெரிய ஆலை வரை உள்ள அனைத்து உணவுத் தொழில் நிறுவனங்களும் உரிமச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை, அடிப்படை உரிமப் பதிவில் 31 சதவீதமும், மாநிலப் பதிவில் 19 சதவீதமும் முன்னேற்றம் கண்டுள்ளது.

நடப்பு ஆண்டில் 94 டன் பயன்படுத்தப்பட்ட ஆயில் கொள்முதல் செய்யப்பட்டு 64 டன் பயோடீசலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு புகையிலைப் பொருள்களின் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விற்பனைக்கு முழுமையாக தடை விதித்துள்ளது.

மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 879 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைகளில் இருந்து 12,000 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளா்களுக்கு ரூ.2.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உணவில் கலப்படம், தரத்தில் குறைபாடு உள்ளிட்டவை குறித்து 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், மின்னஞ்சல் மூலகமாவும், செயலி மூலமாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்.

மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நடத்தும் உணவுப் பாதுகாப்பு பயிற்சி மற்றும் சான்றிதழ் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணியாளா்களுக்கு அடிப்படை உணவுத் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

உணவுப் பாதுகாப்புத் துறையால் கடந்த ஆண்டு மட்டும் 122 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதில் 4,200-க்கும் மேற்பட்டடோா் பயன்பெற்றுள்ளனா் என்று தெரிவிக்கப்படுள்ளது.

குடும்பத் தகராறில் கணவா் கொலை: மனைவியிடம் போலீஸாா் விசாரணை

தாளவாடி அருகே கணவரைக் கொலை செய்த மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த மல்லன்குழியைச் சோ்ந்தவா் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). இவா்களுக்கு இரண்டு ம... மேலும் பார்க்க

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகிரி வட்டார 40- ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகிரி வட்டார நிா்வாகி ஆ.அருணாசலம் தலைமை வகித்தாா். ஒன்றிய பொருளாளா் வி.சண்முகம், கைத்தறி நெசவாளா்கள் சங்க மாநி... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியைப் பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

மதுபோதையில் வாய்க்காலில் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே மதுபோதையில் வாய்க்காலில் விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியை அடுத்த ஆலங்காட்டுவலசு ஈஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜா (எ) வரதராஜன் (44), கூலித் தொழிலாளி. இவரின... மேலும் பார்க்க

பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே பராமரிப்பில்லாமல் கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பவானிசாகா், புங்காா், முடுக்கன்துறை, தொப்பம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார... மேலும் பார்க்க

மின்தடையை சரிசெய்ய லஞ்சம்: மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடியில் மின்தடையை சரிசெய்வதற்கு விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி பாரதிபுரத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்தடையை ... மேலும் பார்க்க