செய்திகள் :

300 ஆண்டு பழைமையான ஸ்பானிய கப்பல்; கடலுக்கு அடியில் கிடைத்த ரூ.8 கோடி மதிப்பிலான நாணயங்கள்!

post image

அமெரிக்காவின் ஃபுளோரிடா கடற்கரைக்கு அப்பால், 30 ஆண்டுகள் பழைமையான ஸ்பானிஷ் கப்பல் சிதைவிலிருந்து சுமார் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி) மதிப்புள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை தொழில்முறை டைவர்ஸ் குழு மீட்டெடுத்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு ஒரு புதையலாக கருதப்படுகிறது.

ஃபுளோரிடாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த கடற்கரையில் பல ஆண்டுகளாக மூழ்கிய கிடந்த கப்பலின் சிதைவுகளில் இருந்து புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

300-year-old Spanish ship; Coins worth 10 million found under the sea!

மீட்டெடுக்கப்பட்ட இந்த நாணயங்கள் வெறும் பொக்கிஷமாக மட்டுமல்லாமல் அவை கடந்த கால வாழ்க்கை பற்றி சொல்லும் வரலாற்று சான்றுகளாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த நாணயங்களில் பெரும்பாலானவை மெக்சிகோ, பெரு, பொலிவியா போன்ற ஸ்பானிஷ்ய காலனி நாடுகளில் தயாரிக்கப்பட்டவை ஆக உள்ளன. பல நாணயங்களில் அவை அச்சிடப்பட்ட ஆண்டு மற்றும் சின்னங்கள் தெளிவாக தெரிவதால் இது வரலாற்று ஆசிரியர்களுக்கு பெரும் மதிப்பாக அமைந்துள்ளது.

மீட்பு பணியை மேற்கொண்ட நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குனர் கூறுகையில் ”இந்த கண்டுபிடிப்பின் மதிப்பு அந்த டாலரில் இல்லை ஒவ்வொரு நாணயமும் ஒவ்வொரு வரலாறாக பார்க்கிறோம்.

ஒரே மீட்பின் போது ஆயிரம் நாணயங்கள் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான ஒன்றாகவே பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எடுக்கப்பட்ட புதையல் யார் வைத்துக் கொள்வது?

ஃபுளோரிடா மாநில சட்டத்தின் படி, மாநிலத்திற்கு சொந்தமான நீருக்கடியில் காணப்படும் எந்த ஒரு வரலாற்றுப் பொருள்களும் புதையல்களும் மாநிலத்துக்கே சொந்தமானது. இருந்தாலும் உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறிப்பிட்ட ஒப்பந்த அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கின்றன.

அதன்படி மீட்கப்படும் தொல்பொருள்களின் 20 சதவீதம் பொது கண்காட்சி அல்லது ஆராய்ச்சிக்காக மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மீதிமுள்ளவை உரிமத்தில் உள்ள விதிகளின்படி மீட்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் ஓர் வீரர் உயிரிழந்தால் என்ன நடக்கும்? - நாசாவின் ரூல்ஸ் இதுதான்!

மனிதன் விண்வெளிக்கு பயணம் செய்யத் தொடங்கியது முதல் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் திட்டங்கள் வரை விண்வெளிப் பயணங்களுக்கு என சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.ஒருவேளை... மேலும் பார்க்க

15 மனைவிகள்; 30 குழந்தைகள்; விமான நிலையத்தையே வியப்படைய வைத்த தென்னாப்பிரிக்க மன்னர்!àà

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்தில் கடந்த ஜுலை மாதம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் எஸ்வாட்டினி என்ற சிறிய நாடு ஒன்று உள்ளது... மேலும் பார்க்க

பிரதமர் மோடியைத் தொடர்ந்து கும்பிட்ட நிதீஷ் குமார்: `அவருக்கு என்ன ஆச்சு?' - எதிர்க்கட்சிகள் கேள்வி

பீகாரில் அடுத்த ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் அவசர அவசரமாக நலத்திட்ட உதவிகளை அறிவித்த... மேலும் பார்க்க

இருமல் மருந்து: சிரப் எச்சரிக்கை முதல் மருந்தில்லா தீர்வுகள் வரை மருத்துவர் விளக்கம்

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள், சில நாட்களில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது, இந்திய அளவில் பெற்றோர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

அமெரிக்கா: ஆன்லைனில் தாய்ப்பாலை வாங்கி பருகும் பாடி பில்டர்கள் - என்ன காரணம் தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த சில தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் போக மீதி இருக்கும் பாலை ஆன்லைனில் தளங்களில் விற்று டாலர்களில் சம்பாதித்து வருகின்றனர். தாய்ப்பால் விற்பனை செய்து ஒரே நாளில்... மேலும் பார்க்க

கோன்பனேகா குரோர்பதி: 7 ஆண்டுக்கால முயற்சி; யூடியூப் மூலம் படித்து ரூ.50 லட்சம் வென்ற விவசாயி!

நடிகர் அமிதாப்பச்சன் நடத்தும் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆகும். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமானோர் லட்சாதிபதியாகி இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே இதில் பங்கெடுத்து கோடீஸ்வரராகி இருக்க... மேலும் பார்க்க