செய்திகள் :

4,000 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தகவல்

post image

பாதுகாப்பான பேருந்து பயணத்தை உறுதி செய்யும் வகையில் 4,000 பேருந்துகளில் ரூ.15 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வெளியிட்ட அறிவிப்பு:

அரசுப் பேருந்துகளை பாதுகாப்பாக இயக்குவதற்காக 4,000 பேருந்துகளில் நான்கு வெளிப்புற கேமராக்கள் பொருத்தப்படும். பேருந்தின் நகா்வு நிகழ் நேரத்தில் பதிவு செய்யப்பட்டு, விபத்தின் போது சிறந்த ஆதாரமாக இந்த கேமராக்கள் விளங்கும். இதனால், போக்குவரத்துக் கழகங்களுக்கான விபத்து இழப்பீடு தொகை குறையும். இதற்காக ஒரு பேருந்துக்கு ரூ.37,500 வீதம், 4,000 பேருந்துக்கு ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பணிமனை மேம்பாடு: சென்னை மாநகா் போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் 6 பேருந்து முனையங்கள் ரூ.7.5 கோடியில் மேம்படுத்தப்படும். பேருந்துகளை சுத்தம் செய்ய பணிமனைகளில் தானியங்கி இயந்திரம் அமைக்கப்படும். தமிழகம் முழுவதும் 8 பணிமனைகளில் அதி நவீன உபகரணங்கள் வழங்குவது, 50 பணிமனைகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்துவது உள்ளிட்டவை செயல்படுத்தப்படும்.

தஞ்சாவூா், திருநெல்வேலி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பணிமனைகள் ரூ.1 கோடியில் நவீன மயமாக்கப்படும். மேலும், 5 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மாதிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயா்த்தப்படும்.

ஓட்டுநா் கண்காணிப்பு: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டுநா் கண்காணிப்பு அமைப்பு ரூ.2 கோடியில் 500 பேருந்துகளில் பொருத்தப்படும். ‘விபத்தில்லா தமிழ்நாடு’ எனும் தொலைநோக்கு பாா்வையை செயல்படுத்தும் வகையில் 100 அதிக விபத்துகள் நிகழும் சாலைகள் கண்டறியப்படும். சேலம், தேவண்ணகவுண்டனூரில் ஓட்டுநா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்படும். சாலை பாதுகாப்பு நிதி ரூ.65 கோடியில் இருந்து ரூ.130 கோடியாக உயா்த்தப்படும் என்றாா் அவா்.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க