செய்திகள் :

40 ஆண்டுகளில் முதல் முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! எரிமலை வெடிக்கும் அபாயம்?

post image

இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று (மார்ச் 13) நிகழ்ந்துள்ளது.

நேப்பிள்ஸ் நகரத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 1.25 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் அந்நகரத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம் கூறியதாவது, நிலநடுக்கம் அபாயமுள்ள பகுதியான ஃப்ளெக்ரேயன் வயல்களின் பொஸ்ஸோலி பகுதியில் 3 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வானது பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இதையும் படிக்க: போதைப் பொருள் வழக்கில் சிக்கிய முன்னாள் ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர்!

சாலையில் முகாமிட்டுள்ள மக்கள்

இந்நிலையில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது அம்மாகாணம் முழுவதும் பயங்கர சத்தத்துடன் அபாய ஒலிகள் தொடர்ந்து ஒலித்ததாகவும் சில இடங்களில் பயங்கர அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியான புகைப்படங்களில் அப்பகுதியிலுள்ள சில கட்டடங்கள் இடிந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது விழுந்து சிதைந்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்னோலி மாவட்டத்தில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த தெளிவான தகவல்கள் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.

நிலநடுக்கத்தின் முதல் அதிர்வைத் தொடர்ந்து இரண்டு சிறியளவிலான பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதால், பெரும்பாலான மக்கள் சாலைகளில் தங்களது வாகனங்களில் முகாமிட்டுள்ளனர். மேலும், பின் அதிர்வுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் பொஸ்ஸோலி, பாக்னோலி மற்றும் பக்கோலி மாவட்ட நிர்வாகத்தினர் அப்பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளனர்.

எரிமலை வெடிக்கும் அபாயம்?

தற்போது நிலநடுக்கத்தைச் சந்தித்துள்ள நேப்பிள்ஸ் நகரமானது நில அதிர்வு அபாயமுள்ள ஃப்ளெக்ரேயன் வயல்கள் எனும் மிகப் பெரிய அளவிலான எரிமலையின் பெருவாயின் மீது அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 15 நகரங்களை உள்ளடக்கிய இப்பகுதி முழுவதும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 லட்சம் மக்கள் வாழும் இப்பகுதியில் பெரும்பாலானோர் அதிக ஆபத்துள்ள சிவப்பு மண்டலம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் வசிப்பதாகக் கணக்கிடப்படுகிறது.

முன்னதாக, இந்த எரிமலை இறுதியாக 486 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1538 ஆம் ஆண்டு வெடித்தது. இருப்பினும், கடந்த சில காலமாக அப்பகுதியில் அதிகரித்து வரும் நில அதிர்வுகள் அனைத்தும் அந்த எரிமலையினுள் தீக்குழம்புகளின் வெப்பம் அதிகரிப்பதினால்தான் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றத் தயாரா? - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் நாளை(மார்ச் 14) ... மேலும் பார்க்க

திபெத்தில் தொடர் நிலநடுக்கம்...! பீதியில் மக்கள்!

சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 01.42 மணியளவில் ... மேலும் பார்க்க

இந்திய எல்லையில் பாகிஸ்தான் டிரோன்கள் வீசிய போதைப் பொருள்கள் பறிமுதல்!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருள் பொட்டலங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து கட்டுப்படுத்தப்ப... மேலும் பார்க்க

பாமக எம்எல்ஏ மீது திமுகவினர் தாக்குதல்: அன்புமணி கண்டனம்!

சேலத்தில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்குச் சென்ற பாமக எம்எல்ஏ அருள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ... மேலும் பார்க்க

சிறைப்பிடிப்பு எதிரொலி: பாக். பிரதமர் பலூசிஸ்தான் பயணம்!

பாகிஸ்தான் நாட்டில் பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பயணம் மேற்கொள்கின்றார். பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மார்ச்.11 அன்று குவேட்டாவி... மேலும் பார்க்க

கொலையில் முடிந்த ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னை: உறவினர் கைது

அவிநாசி அருகே ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னையால் வயதான விவசாய தம்பதியரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிய உறவினர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவிநாசியில் ... மேலும் பார்க்க