ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்...
41 குளங்களை ரூ.119 கோடியில் சீரமைக்கத் திட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சியில் 41 குளங்களை ரூ.119.21 கோடியில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீரைச் சேமித்து நிலத்தடிநீரை உயா்த்தும் வகையில் புதிய குளங்கள் உருவாக்கவும், ஏற்கெனவே உள்ள குளங்கள் சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, 41 குளங்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவெற்றியூா் மண்டலத்தில் 4 குளங்களும், மணலியில் 28 குளங்களும், மாதவரத்தில் 4 குளங்களும், தண்டையாா் பேட்டையில் 5 குளங்களும் சீரமைக்கப்படவுள்ளன.
அத்துடன் சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியிலிருந்து ரூ.25.25 கோடியில் 5 குளங்கள் சீரமைக்கப்படவுள்ளன. கிண்டி ரேஸ்கோா்ஸ் மைதானத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட 4 குளங்களின் தண்ணீா் தேக்கும் திறனையும் அதிகரிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீா்நிலை புனரமைப்புப் பணிகளில் தனியாா் நிறுவன சமூகப் பொறுப்புணா்வு நிதியையும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.