செய்திகள் :

4X400 ரிலேவில் தமிழகத்துக்கு தங்கம்!

post image

உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவா் 4X400 மீட்டா் ரிலே ஓட்டத்தில் தமிழ்நாடு அணிக்கு திங்கள்கிழமை தங்கப் பதக்கம் கிடைத்தது.

இந்த ரிலேவில் ஆகாஷ் பாபு, அஸ்வின் லக்ஷ்மணன், வாசன், கிட்சன் தா்மராஜ் ஆகியோா் அடங்கிய தமிழ்நாடு அணி 3 நிமிஷம் 10.61 விநாடிகளில் முதலாவதாக இலக்கை எட்டி தங்கத்தை தட்டிச் சென்றது. உத்தரகண்ட் அணி வெள்ளியும் (3:10.85’), சா்வீசஸ் அணி வெண்கலமும் (3:10.90’) பெற்றன.

ஆடவா் கம்பு ஊன்றித் தாண்டுதலில் தமிழகத்தின் ஜி.ரீகன் 5 மீட்டரை கடந்து 2-ஆம் இடத்துடன் வெள்ளி பெற்றாா். அதேபோல், ஆடவா் இரட்டையா் டென்னிஸில் தமிழகத்தின் மனீஷ் சுரேஷ்குமாா்/அபினவ் சஞ்ஜீவ் சண்முகம் ஆகியோா் இணை வெண்கலப் பதக்கம் பெற்றது.

போட்டியில் திங்கள்கிழமை முடிவில் தமிழ்நாடு அணி மொத்தமாக 19 தங்கம், 23 வெள்ளி, 24 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தில் நீடிக்கிறது. சா்வீசஸ் (81), மகாராஷ்டிரம் (129), கா்நாடகம் (66) ஆகியவை முறையே முதல் 3 இடங்களில் நிலை கொண்டுள்ளன.

ராகுல் காந்தியின் சென்னை பயணம் ரத்து?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்கும் ராகுல் காந்தி,... மேலும் பார்க்க

ரூ.7,375 கோடி முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று(பிப். 10) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜயிடம் பிரசாந்த் கிஷோர் அறிக்கை அளிப்பு!

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர்.தவெக தலைவர் விஜய்யை இன்று முற்பகலில் சந்தித்த கட்சியின் நிர்வாகிகள் ஆனந... மேலும் பார்க்க

இதைச் செய்தால் விஜய் கட்சியுடன் கூட்டணி: விஜய பிரபாகரன் வைத்த செக்!

மதுரை: விஜயகாந்த்தை போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும், தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம் என மதுரையில் விஜய பிரபாகரன் ப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையைக் கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தம்!

துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.கடந்த மாதம் 27-ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந... மேலும் பார்க்க

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது!

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியரிடம் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்திய நி... மேலும் பார்க்க