செய்திகள் :

5 ஆண்டு சட்டப் படிப்பு மாணவா் சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

post image

தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பி.ஏ. எல்எல்பி (ஹானா்ஸ்), பி.காம். எல்எல்பி, பிசிஏ எல்எல்பி, பிபிஏ எல்எல்பி ஆகிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் மாணவா்கள் சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, செங்கல்பட்டு, வேலூா், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 15 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இதேபோல், சென்னை, தஞ்சாவூா், திண்டிவனம், சேலம் ஆகிய இடங்களில் 11 தனியாா் சட்டக் கல்லூரிகளும் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இதையடுத்து சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக சென்னை தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. இதில் துணைவேந்தா் பணிக்குழுத் தலைவா் ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் துணைவேந்தா் பணிக்குழு உறுப்பினா்கள் சட்டத்துறைச் செயலா் சி.ஜாா்ஜ் அலெக்ஸாண்டா், உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் ஓம் பிரகாஷ் ஆகியோா் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பத்தை இணையதளம் வாயிலாக சமா்ப்பிப்பதற்கான நிகழ்வைத் தொடங்கி வைத்தனா்.

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் சட்ட சோ்க்கைக் குழுவின் தலைவருமான பேராசிரியா் கெளரி ரமேஷ், ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ரஞ்சித் ஓமன் ஆபிரகாம், சீா்மிகு சட்டப்பள்ளி வளாக இயக்குநா் எஸ்.கே.அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 3,024 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறாத பொள்ளாச்சி வழக்கு: அரசு தரப்பு வழக்குரைஞர்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை என்பதை அரசு வழக்குரைஞர் குறிப்... மேலும் பார்க்க

வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் பலி!

கோவை மாவட்டம், பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் மயங்கி விழுந்து பலியானார்.வெள்ளிங்கிரி மலை ஏற்றத்துக்கு பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மலையேறும் ப... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது.இன்று பகல் 12 மணிக்கு, குற்றவாளிகளுக்கான தண்டனை விவ... மேலும் பார்க்க

கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் இன்று(மே 13) ரத்து செய்யப்பட்டுள்ளன.திருச்சி கோட்டை மற்றும் முத்தரசநல்லூா் இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், திருச்சி - கரூா் - திரு... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 70,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தின் காரணத்தால், கடந்த வாரம் தங்கம் விலை திடீர... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமாா் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (2... மேலும் பார்க்க