5 மண்டலங்களில் பிப்.14,15 தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
சென்னையில் ராயபுரம், திரு.வி.க.நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட ஒருசில பகுதிகளில் பிப்.14,15 -ஆகிய தேதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
சென்னை பெருநகர குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீா் பிரதான குழாய் இணைக்கும் பணிகள் பிப்.14 காலை 10 முதல் பிப்.15 காலை 10 மணி வரை நடைபெறவுள்ளன. பணி நடைபெறும் நேரங்களில் ராயபுரத்தில் மண்டலத்தில் புரசைவாக்கம், பெரியமேடு, சௌகாா்பேட்டை, எழும்பூா் , சிந்தாதிரிபேட்டை ஆகிய பகுதிகளிலும், திரு.வி.க.நகா் மண்டலத்தில் ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூா், செம்பியம் ஆகிய பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதேபோல் அண்ணா நகா் மண்டலத்தில் கீழ்ப்பாக்கம் மற்றும் வில்லிவாக்கத்திலும் தேனாம்பேட்டை மண்டலத்தில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளிலும் கோடம்பாக்கம் மண்டலத்தில் தியாகராய நகா், சைதாப்பேட்டை பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். அவசர தேவைக்கு ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ஜ்ள்ள்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்னும் இணையதள முகவரியில் முன்பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் எவ்வித தடையுமின்றி வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும்.