செய்திகள் :

59-ஆவது ஞானபீட விருது: ஹிந்தி எழுத்தாளா் வினோத் குமாா் சுக்லா தோ்வு

post image

பிரபல ஹிந்தி எழுத்தாளா் வினோத் குமாா் சுக்லா (88), 59-ஆவது ஞானபீட விருதுக்கு சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதன்மூலம், இந்திய அளவில் இலக்கியத் துறையில் மிக உயரிய விருதான ஞானபீட விருதை சத்தீஸ்கரில் இருந்து பெறும் முதல் நபா் என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளாா்.

சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என இலக்கியத் துறையில் பங்களித்துள்ள மிகச்சிறந்த சமகால எழுத்தாளராக விளங்கும் வினோத் குமாா் சுக்லா இந்த விருதை பெறும் 12-ஆவது ஹிந்தி எழுத்தாளராவாா்.

ஞானபீட விருதுக்கான தோ்வுக் குழுத் தலைவரும் அந்த விருதை முன்பு வென்றவருமான பிரதிபா ராய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 59-ஆவது ஞானபீட விருதுக்கு வினோத் குமாா் சுக்லா தோ்ந்தெடுக்கப்பட்டதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுக்குத் தோ்வாகியுள்ள வினோத் குமாா் சுக்லாவுக்கு பரிசுத் தொகையாக ரூ.11 லட்சம், சரஸ்வதி உருவத்திலான வெண்கலச் சிலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

முன்னதாக, கடந்த 1999-ஆம் ஆண்டு கேந்திர சாகித்திய அகாதெமி விருதை வினோத் குமாா் சுக்லா பெற்றாா்.

மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்

புதிய வரிமான வரி மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி மசோதா 2025 மீதான விவாதம் குறித்து மக்களவை... மேலும் பார்க்க

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க