செய்திகள் :

'6 அடி' - தெலங்கனாவின் உயரமான நடத்துனர்; வைரலான புகைப்படம்! - அரசு எடுத்த உடனடி நடவடிக்கை

post image

பெரும்பாலும் தனக்குள்ள கஷ்டங்கள் தீர சரியாக வேலைக்கு செல்வார்கள்... ஆனால், தெலங்கானாவை சேர்ந்த ஒருவருக்கு வேலையே கஷ்டமாக மாறியுள்ளது.

'இப்போ எல்லாருக்கும் அப்படி தான்... வேலையே கஷ்டம் தான்' என்பது தானே உங்கள் மைண்ட் வாய்ஸ். இவரது விஷயத்தில் சம்பவமே வேறு.

தெலுங்கானாவைச் சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது உயரம் 6 அடி 4 இன்ச் ஆகும்.

2021-ம் ஆண்டு, இவரது தந்தை உயிரிழந்தப் பிறகு, வாரிசு கோட்டாவில் இவரது தந்தையின் பேருந்து நடத்துனர் வேலை இவருக்கு கிடைத்துள்ளது.

தெலங்கானா பேருந்து நிலையம்
தெலங்கானா பேருந்து நிலையம்

இவரது உயரத்தால் இவர் குனிந்துகொண்டே தான் வேலை பார்க்க வேண்டியதாக ஆகியுள்ளது.

ஒரு நாளைக்கு இவர் ஐந்து டிரிப் அடிக்கிறார் மற்றும் அதன் பணி நேரம் 10 மணி நேரம் ஆகும்.

இதனால், இவருக்கு தூக்கமின்மை, முதுகு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்பட்டிருக்கிறது.

தெலங்கானா அரசின் நடவடிக்கை

இந்த நிலையில், இவர் பேருந்தில் பணிபுரியும் போட்டோ வைரலாக, தெலங்கானா அரசு தகுந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தெலங்கனா போக்குவரத்து துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் இவருக்கு பேருந்து நடத்துநர் பணி அல்லாமல் போக்குவரத்து துறையை சேர்ந்த வேறு பணியை தருவதாக கூறியுள்ளார்.

`ஓசன்னா... தேவனே எம்மைக் கைவிடாதிரும்' - இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஏன் நினைவுக்கூற வேண்டும்?

மனித குல வரலாற்றில் மோசமான இரவுகளில் ஒன்று. அவரை அவர்கள் அறிவார்கள். அவர் ஆலயங்களிலும் பொது இடங்களிலும் பிரசங்கம் செய்பவர். மதம் வணிகமானபோது அதற்கு எதிராகக் குரல் எழுப்பி, 'கடவுளின் வீட்டை மீட்க வேண்ட... மேலும் பார்க்க

Infant trafficking: மகப்பேறு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தலை எப்படித் தடுக்கிறார்கள்?!

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதைத் தடுப்பதற்காக, மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் திருடப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்த... மேலும் பார்க்க

"தந்தை யார் என்று சொல்லக் கூடாது...” - வாடகை தாயின் வாயை அடைக்க பணம் கொடுக்கிறாரா எலான் மஸ்க்?

உலக பணக்காரரான எலான் மஸ்க், வாடகை தாய் மூலம் பல குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, அதனை ரகசியமாக நிர்வகிக்க ஊக்கத்தொகைகள் கொடுப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் தனி... மேலும் பார்க்க

UP : `வருங்கால மருமகனுடன் வீட்டைவிட்டு வெளியேறியது ஏன்?’ - விசாரணையில் பெண் சொன்னதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்த சப்னா என்ற பெண்ணின் மகளுக்கு ராகுல் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு 10 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், சப்னா தனது வருங்க... மேலும் பார்க்க

Scuba Diving: ``நீருக்குள் சந்தித்தோம், அதனால்..'' - நீருக்கடியில் திருமணம் செய்த காதல் தம்பதி!

வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று விரும்பும் சில மணமக்கள், தங்களது திருமணங்களை தனித்துவமாக நடத்த முற்படுகின்றனர். அப்படி ஒரு காதல் ஜோடி நீருக்கடியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.ப... மேலும் பார்க்க

தாராவி: `ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்கள், சட்டவிரோத குடியிருப்பாளர்கள்' - NMDPL அறிவிப்பால் அதிர்ச்சி

தாராவி குடிசை மேம்பாட்டு ஆணையம்ஆசியாவில் அதிக குடிசையுள்ள பகுதியாக பார்க்கப்படும் மும்பை தாராவியில் உள்ள குடியிருப்புகளை இடித்து விட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மாநில அரசு அதானி ந... மேலும் பார்க்க