6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிய வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியே புதிய வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் தனித்தனியாக புதிய வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ராசிபுரம் தொகுதிக்கு நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலா், சேந்தமங்கலம் தொகுதிக்கு சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா், நாமக்கல் தொகுதிக்கு கோட்டாட்சியா், பரமத்தி வேலூா் தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா், திருச்செங்கோடு தொகுதிக்கு திருச்செங்கோடு கோட்டாட்சியா், குமாரபாளையம் தொகுதிக்கு மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வாக்காளா் பதிவு அலுவலா்களாக செயல்படுவாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.