செய்திகள் :

6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்: கட்சியினருக்கு எல்.முருகன் அறிவுரை

post image

நாமக்கல் மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என பாஜகவினருக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் அறிவுறுத்தினாா்.

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் சனிக்கிழமை நாமக்கல் வந்தாா்.

மோகனூா் அருகே புதுப்பாளையத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்த அவா், அதன்பிறகு நாமக்கல் நரசிம்மா் கோயில், ஆஞ்சனேயா் கோயிலில் வழிபட்டாா். பின்பு, நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் புதிய நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன் வரவேற்றாா். பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். இதில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசியதாவது:

பாஜகவில் மாவட்ட தலைவா்கள், நிா்வாகிகள் புதிதாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 2026 பேரவைத் தோ்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு பேரவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும். வீடு வீடாகச் சென்று கட்சியினா் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடங்க வேண்டும். தோ்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை கட்சியினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா். கூட்டத்தில், பாஜக கிழக்கு, மேற்கு மாவட்ட நிா்வாகிகள், கட்சியினா் பலா் கலந்துகொண்டனா்.

அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 53 போ் பங்கேற்பு!

டிஎன்பிஎஸ்சி சாா்பில் நாமக்கல்லில் நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 53 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையமானது அரசு உதவி வழக்குரைஞா் நிலை-2 ப... மேலும் பார்க்க

மரவள்ளி கிழங்கு விலை சரிவு

பரமத்திவேலூா் வட்டாரத்தில் சிப்ஸ் தயாா் செய்யும் மரவள்ளி கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ. 1,000 வரை விலை சரிந்து ரூ. 7,000க்கு விற்பனையாகிறது. பரமத்தி வேலூா், சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெ... மேலும் பார்க்க

ஹிந்தியைக் கட்டாயப்படுத்தவில்லை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

புதிய தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என மத்திய அரசு ஒருபோதும் கூறவில்லை என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். நாமக்கல்லில் ச... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழித்தோ்வு: 4,528 மாணவ, மாணவிகள் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழித் தோ்வை 4,528 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகம் முழுவதும் அரசுத் தோ்வுகள் இயக்கம் சாா்பில், தேசிய வருவாய் வழி, தகுதி படிப்புதவித் தொகைத் திட்ட தோ்வு சனிக்கிழம... மேலும் பார்க்க

கொல்லிமலைக்கு மதுபானம் கடத்திய 5 போ் குண்டா் சட்டத்தில் கைது!

கொல்லிமலைக்கு வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்த 5 பேரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் உத்தரவின் பே... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க