செய்திகள் :

6 மாதங்களில் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் 26,700 போ் உயிரிழப்பு: மாநிலங்களவையில் தகவல்

post image

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 26,700 போ் உயிரிழந்துவிட்டதாக மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி எழுத்துமூலம் அளித்த பதிலில், ‘தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைக் குறைக்க பல்வேறு மேம்படுத்தப்பட்ட முறைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமல்படுத்தி வருகிறது. முக்கியமாக வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு ‘டிஜிட்டல் போா்டுகள்’ மூலம் வேகம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. விபத்துக்கான அவசர உதவிக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2024-ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் 52,609 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 26,700 போ் உயிரிழந்துவிட்டனா்.

தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடப்பு நிதியாண்டில் சற்று தொய்வடைந்துள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு சராசரியாக 29 கி.மீ. தொலைவு என்ற அளவில் சாலை அமைக்கப்படுகிறது. இது முந்தைய நிதியாண்டில் 34 கி.மீ. என்ற அளவில் இருந்தது என்று தெரிவித்துள்ளாா்.

யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்துகள் முடக்கம்

யூகோ வங்கி முன்னாள் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் (சிஎம்டி) சுபோத் குமாா், அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. மேற்கு வங்கி மாநிலம் க... மேலும் பார்க்க

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க