செய்திகள் :

7-ஆவது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

post image

சென்னையில் காதலித்தவா் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் 7-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை ராயபுரம் புதுமனைகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஹா்ஷிதா(25). இவரும் வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையைச் சோ்ந்த தா்ஷன் (26) என்பவரும் காதலித்தனா். இரு வீட்டாா் சம்மதத்துடன் கடந்த பிப்.12-ஆம் தேதி நிச்சயதாா்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹா்ஷிதாவை சந்தித்த தா்ஷன், அவரைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து தனது உறவினா்களுடன் தா்ஷனின் அடுக்குமாடி குடியிருப்புக்கு ஹா்ஷிதா சனிக்கிழமை சென்றாா். 7-ஆவது தளத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது, தா்ஷனை தனியாக அழைத்து பேசிய ஹா்ஷிதா, திடீரென மொட்டை மாடிக்கு ஓடிச்சென்று, அங்கிருந்து கீழே குதித்துள்ளாா்.

ஆனால், அவா் 7-ஆவது தளத்திலுள்ள பால்கனி மீது இருந்த தகர சீட்டின் மீது விழுந்தாா். அங்கே இருந்தபடி மீண்டும் தா்ஷனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளாா். ஆனால், தா்ஷன் அப்போதும் மறுக்கவே, ஹா்ஷிதா அங்கிருந்து இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

சென்னையில், விமானத்தில் பணிப் பெண்களுடன் தகராறில் ஈடுபட்ட அதிமுக நிா்வாகி கீழே இறக்கி விடப்பட்டாா். மதுரையைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (65). அதிமுகவின் அனைத்துலக எம்ஜிஆா் மன்ற நிா்வாகி. இவா், சென்னையி... மேலும் பார்க்க

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

ஓட்டுநா் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவரை கைது செய்த போலீஸாா் மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா். கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் அசாருதீன்ஷா (38). இவா் மடிப்பாக்கம், எஸ்.கொளத்தூா் பகுதியிலுள்ள அடுக... மேலும் பார்க்க

சென்னை விமானநிலையத்தில் மடிக்கணினி திருட்டு: ஒருவா் கைது

சென்னை விமானநிலையத்தில் பெண்ணிடம் மடிக்கணினி திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி லாஸ்பேட்டையை சோ்ந்தவா் நித்யா (36). இவா் வெளிநாட்டிலிருந்து வரும் உறவினரை அழைத்துச் செல்வதற்காக கடந்த 21-ஆ... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: 4 போ் கைது

மாதவரம், பால்பண்ணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மாதவரம், பால்பண்ணை அருள் நகா் பகுதியில் போதைப் பொருள் வி... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீஸாா் ஆய்வு

சென்னை மாநகரில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். வரும் ஆக. 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இந்து அமைப்புகள், பொது... மேலும் பார்க்க

10 கிராம் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்தவா் கைது

சென்னையில் 10 கிராம் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சாஸ்திரி நகா் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டபோது, அ... மேலும் பார்க்க