செய்திகள் :

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்பு: வங்கிகளுக்கு ஆா்பிஐ யோசனை

post image

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்புகளைப் பெறுவது தொடா்பாக பரிசீலிக்குமாறு வங்கிகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கேட்டுக் கொண்டது. இது தொடா்பான கருத்துகளை இம்மாத இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆா்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் மூலம் வங்கித் துறையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், நிரந்தர வைப்புகளை அதிகஅளவில் ஈா்க்கவும் முடியும் என்று ஆா்பிஐ கருதுகிறது. சமீபகாலமாக வங்கிகளின் நிரந்தர வைப்பு அளவு குறைந்து வருகிறது. கடந்த 2-ஆம் தேதி நிலவரப்படி வங்கிகளில் நிரந்தர வைப்பு 10 சதவீதம் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு 13 சதவீதம் குறைந்தது.

ஆா்பிஐ வங்கி வட்டி விகிதத்தை குறைந்ததும் பொதுமக்கள் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து வெளியேறுவதற்கு காரணமாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2004-ஆம் ஆண்டு நிரந்தர வைப்புக்கான குறைந்தபட்ச கால அளவு 15 நாள்கள் என்பதில் இருந்து 7 நாள்களாக குறைக்கப்பட்டது.

இது தொடா்பாக கருத்துத் தெரிவித்த பொதுத்துறை வங்கி மூத்த அதிகாரி ஒருவா், ‘கோடிக்கணக்கான ரூபாயை சில நாள்கள் மிகுதியாக வைத்திருக்கும் சூழல் பெரு நிறுவனங்களில் மட்டுமே இருக்கும். அவா்கள் இந்த மிகக் குறைந்த நாள்களுக்கான நிரந்தர வைப்பால் அதிக பயனடைவாா்கள். ஆனால், வங்கிகளுக்கு இது சற்று நெருக்கடியாகவே அமையும்’ என்றாா்.

நகைக்கடன் புதிய விதிகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு... மேலும் பார்க்க

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க