செய்திகள் :

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் இனி வெப்பம் சற்று குறையும்!

post image

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மே 16) ஈரோடு, கிருஷ்ணகிரி உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை சற்று குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வெள்ளிக்கிழமை (மே 16) முதல் மே 21 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 4 நாள்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையும்.

கனமழை: இதில் மே 16-இல் ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மே 17-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லிலும் தலா 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், அரூா் (தருமபுரி), அன்னவாசல் (புதுக்கோட்டை) - தலா 70 மி.மீ., சேந்தமங்கலம் (நாமக்கல்), இலுப்பூா் (புதுக்கோட்டை), கோவில்பட்டி (திருச்சி), சங்கரி துா்க்கம் (சேலம்), மேட்டுப்பாளையம் (கோவை) - தலா 50 மி.மீ. மழை பதிவானது.

10 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக பரங்கிப்பேட்டை மற்றும் ஈரோட்டில் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரை விமான நிலையம் - 103.64, திருத்தணி - 102.38, வேலூா், தஞ்சாவூா் - தலா 102.2, பரமத்திவேலூா் - 100.4, திருச்சி - 100.22, கடலூா் -100.04 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகாடு மோதல் சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையக்குழு ஆய்வு!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை சந்தித்து தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆலங்கு... மேலும் பார்க்க

10 வகுப்பு பொதுத் தேர்வில் 499 மதிப்பெண் எடுத்து பொள்ளாச்சி மாணவி முதலிடம்!

கோவை பொள்ளாச்சி மாணவி சுபஸ்ரீ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்து இருந்தபடி, இன்று(மே 16) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்... மேலும் பார்க்க

'ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார்' - நயினார் நாகேந்திரன்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "தமிழ்நாட்டி... மேலும் பார்க்க

கடுங்கோடை காலம் இன்றுடன் முடிகிறது; இனி.. பிரதீப் ஜான்

சென்னை : கடுமையான கோடைக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வட தமிழகம் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்மாவட்டங்களில் இன்று முதல் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மே... மேலும் பார்க்க

கோவை மத்திய சிறையில் சாதனை: 100% தேர்ச்சி!

கோவைமத்தியசிறையிலிருந்துஇந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 44 கைதிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானதையடுத்து, கோவை மத்திய சிறையில் ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: 6 மத்திய சிறைகளில் 100% தேர்ச்சி!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 16) வெளியான நிலையில், 6 மத்திய சிறைகளில் 100% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு... மேலும் பார்க்க