செய்திகள் :

71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பம்: ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடியில் டெண்டா்

post image

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தனபூா் மற்றும் சோன்பூா் ரயில் பிரிவுகளில் 502 கி.மீ. வழித்தடத்தில் உள்ள 71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடி மதிப்பிலான டெண்டா் விடப்பட்டுள்ளது.

‘கவச்’ என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு முறையாகும். இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாவதை தடுக்கவும் ரயில்களை பாதுகாப்பாக இயக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்துக்குள்பட்ட 71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கான ரூ.288 கோடி டெண்டரை ரயில்டெல் நிறுவனம் பெற்றுள்ளது.

இதன்மூலம் கிழக்கு மத்திய ரயில் மண்டலத்தின் செயல்பாடுகளையும் ரயில்வே துறையை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும் ரயில்டெல் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு ரயில்டெல் செயல்படுகிறது.

இத்திட்டத்துக்கான கவச் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை க்வாட்ரண்ட் ஃபியூச்சா் டெக் நிறுவனம் வழங்கவுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்

தில்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அதிஷி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எ... மேலும் பார்க்க

ஹிமாசலில் நிலநடுக்கம்!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.42 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுந்தர்நகர்... மேலும் பார்க்க

கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!

அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாபி நடிகை சோனியா மான் ஆம் ஆத்மியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அவரை வரவேற்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "கிர்த்தி கிசான் அமைப்பு... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை நெருங்கிய மீட்புக் குழு!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்கியுள்ளதாக ... மேலும் பார்க்க

பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராகுல் காந்தி பேச்சு

தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா். தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையி... மேலும் பார்க்க