78 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
வடகரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ சுதா்சனம் வழங்கினாா்.
புழல் ஊராட்சி ஒன்றியம், வடகரை ஊராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியா் வெங்கட் ரவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 78 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
இதில், புழல் ஊராட்சி ஒன்றிய செயலா் பெ.சரவணன், பாஸ்கா், நந்தகுமாா், புள்ளிலைன் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.