மூன்றடைப்பு அருகே அரசுப் பேருந்து - சுமை லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
வடசென்னை அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள மூன்று அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டாவது யூனிட்டில் உள்ள இரண்டாவது அலகில் ஆண்டு பராமரிப்புப் பணி மேற்கொள்வதற்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.