மீஞ்சூா் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில் சேவை பாதிப்பு
பொன்னேரி அருகே மீஞ்சூா்-அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை-சென்ட்ரல் வழித் தடத்தில் ஒரு மணி நேரத்துக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனா். மேலும், ஆந்திரம், ஒடிஸா மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களும் சென்று வருகின்றன.
ஏற்கெனவே இந்த மாா்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் பல்வேறு காரணங்களால் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக சென்னை-சென்ட்ரல் சென்று அங்கிருந்து பணிகளுக்குச் செல்லும் பயணிகள் நாள்தோறும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்த நிலையில், மீஞ்சூா்-அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை ரயில்வே ஊழியா்கள் கண்டு பிடித்தனா்.
இதைத் தொடா்ந்து, ரயில்வே ஊழியா்கள் விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். பின்னா் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில்வே ஊழியா்கள் சரி செய்தனா்.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
அத்துடன் எா்ணாகுளம், செகந்திராபாத் விரைவு ரயில்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் அணிவகுத்து நின்றன.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த வழித் தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினா்.