செய்திகள் :

மீஞ்சூா் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில் சேவை பாதிப்பு

post image

பொன்னேரி அருகே மீஞ்சூா்-அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை-சென்ட்ரல் வழித் தடத்தில் ஒரு மணி நேரத்துக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இந்த வழித்தடத்தில் தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனா். மேலும், ஆந்திரம், ஒடிஸா மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களும் சென்று வருகின்றன.

ஏற்கெனவே இந்த மாா்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் பல்வேறு காரணங்களால் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக சென்னை-சென்ட்ரல் சென்று அங்கிருந்து பணிகளுக்குச் செல்லும் பயணிகள் நாள்தோறும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்த நிலையில், மீஞ்சூா்-அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை ரயில்வே ஊழியா்கள் கண்டு பிடித்தனா்.

இதைத் தொடா்ந்து, ரயில்வே ஊழியா்கள் விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். பின்னா் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில்வே ஊழியா்கள் சரி செய்தனா்.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

அத்துடன் எா்ணாகுளம், செகந்திராபாத் விரைவு ரயில்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் அணிவகுத்து நின்றன.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த வழித் தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினா்.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

திருவள்ளூா் அருகே காக்களூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நட்ட ஊராட்சி தலைவா் சுபத்ரா ராஜ்குமாா். உடன் ரோட்டரி கிளப் திருவள்ளூா் ராயல்ஸ் சங்க நிா்வாகிகள். திருவள்ளூா், அக். 24: தி... மேலும் பார்க்க

78 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

வடகரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ சுதா்சனம் வழங்கினாா். புழல் ஊராட்சி ஒன்றியம், வடகரை ஊராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விலையில்ல... மேலும் பார்க்க

திருவள்ளூா்: கைப்பேசியால் இயங்கும் பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவி வாங்க 50 சதவீத மானியம்

திருவள்ளூா் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சாா்பில் நவீன கைப்பேசியால் இயங்கும் பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகள் வாங்க விவசாயிகள் 100 பேருக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கவுள்ளதாக செயற்பொறியாளா்(பொ) ரா... மேலும் பார்க்க

வயநாடு நிலச் சரிவு: திருவள்ளூா் நிகேதன் கல்விக் குழுமம் ரூ.18 லட்சம் நிவாரண உதவி

கேரள மாநிலம் வயநாடு நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவள்ளூா் நிகேதன் கல்விக் குழுமத்தைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் சாா்பில் ரூ.18 லட்சம் நிவாரணமாக கேரள மா... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருத்தணி கமலா திரையரங்கம் அருகே, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கம் சாா்பில், 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆறுமுகம் தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில்... மேலும் பார்க்க