செய்திகள் :

8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த மோடி அரசை பாராட்டுகிறேன்: ப. சிதம்பரம்

post image

மதுரை: 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்து அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை குறைத்துள்ள மோடி அரசை பாராட்டுகிறேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது, மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி வகிதங்களில் கொண்டு வந்துள்ள மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்து அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை குறைத்துள்ள மோடி அரசை பாராட்டுகிறேன்.

2007 இல் ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்தும்போது இது தவறு இதுபோன்ற பல்வேறு வரி விகிதங்களை வைக்காதீர்கள் என்று அறிவுறுத்தினோம். தலைமை பொருளாதார ஆலோசகர் அர்ஜுன் சுப்பிரமணியம் இது தவறு என அறிவுறுத்தினார்.

ஆனால், நிதி அமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ நாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளோம்.

பல தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் உள்ள தவறுகளை திருத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஆனால் அவற்றை எல்லாம் பாஜக அரசு கேட்கவில்லை. இப்போதாவது தவறுகளை உணர்ந்து தற்போது திருத்தியதற்காக நான் நன்றி சொல்கிறேன். 8 ஆண்டுகள் நடுத்தர மக்களை, ஏழை மக்களை வரிகளால் கசக்கிப் பிழிந்தனர். 12 சதவீதம் மற்றும் 18 சதவீதமாக இருந்த வரியை 5 சதவீதமாக குறைத்துள்ளதாக கூறியுள்ளார்கள்.

இத்தனை ஆண்டுகளாக அதே மக்கள் தானே 18 சதவீதம் வரியை செலுத்தினார்கள். இப்போது அது பொருத்தம் என்றால் கடந்த ஆண்டும் இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் பொருந்தாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களின் பணத்தை எல்லாம் வாரியாக வசூல் செய்து மக்களை கசக்கிப் பிழிந்த மத்திய அரசு, இப்போதாவது மனம் திருந்தி வரி விகிதங்களை குறைத்து உள்ளார்கள். அதற்காக நான் பாராட்டுகிறேன் என்று சிதம்பரம் கூறினார்.

ஒரு நாடு, ஒரு வரி, ஒரு நாடு ஒன்பது வரிகளாக மாறியது எப்படி?: மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

I commend the Modi government for realizing its mistakes after 8 years and reducing the Goods and Services Tax rate on essential goods.

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?: சித்தராமையா கேள்வி

பெங்களூரு: உள்ளாட்சித் தேர்தல்களின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பழைய முறைக்கு திரும்புவதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை நியாயப்படுத்தும் கா்நாடக முதல்வா் சித்... மேலும் பார்க்க

செப். 18-இல் புதுவை சட்டப்பேரவை கூடுகிறது: ஆா்.செல்வம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை செப்டம்பா் 18-ஆம் தேதி கூடுகிறது என்று பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை தெரிவித்தார். புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த மாா்ச் 27 அன்று முடிந்த... மேலும் பார்க்க

கடலூர் ரசாயனக் கசிவு விபத்து: பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஆலை நிர்வாகம் அலட்சியமா?

ஆலை பாதுகாப்பு ஏற்பாடுகளில் அலட்சியம் காட்டிய ஆலை நிர்வாகத்தின் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி... மேலும் பார்க்க

திருவள்ளுவர் சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டனில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக முதல்வ... மேலும் பார்க்க

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

லண்டனை தலைமையிடமாகக் கொண்ட இந்துஜா குழுமம், தமிழ்நாட்டின் மின்சார வாகனச் சூழலில், பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்காக ரூ.7,500 கோடி முதலீடுகளை செய்யவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செய்யப்பட்... மேலும் பார்க்க

அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு 2 வழக்குரைஞா்கள் நீதிபதிகளாக நியமனம்

அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 2 வழக்குரைஞா்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு உத்தரவிட்டுள்ளார். கடந்த மாா்ச் 25 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக வழக... மேலும் பார்க்க