செய்திகள் :

8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்: விரைவில் அமல்

post image

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நிலவரத்தை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே தயாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அதைப் படிப்படியாக அமல்படுத்தத் தொடங்குமாறு ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தற்போது ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பாக ரயில் பயணச்சீட்டு முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படுகிறது. இது நிச்சயம் பயணம் மேற்கொள்ள முடியுமா என்று பயணிகளை சந்தேகம் கொள்ள வைக்கிறது.

இந்த பிரச்னையை களையும் நோக்கில், பயணச்சீட்டு முன்பதிவு அட்டவணையை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே தயாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, பிற்பகல் 2 மணிக்கு முன் புறப்படும் ரயில்களுக்கான அட்டவணை அதற்கு முந்தைய நாள் இரவு 9 மணிக்கே தயாரிக்கப்பட்டுவிடும்.

இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அதைப் படிப்படியாக அமல்படுத்தத் தொடங்குமாறு ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இது காத்திருப்புப் பயணச்சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியத்தை குறைக்கும். மேலும் பயணச்சீட்டுகளின் காத்திருப்பு நிலவரம் குறித்த முதல் தகவல் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே பயணிகளுக்கு கிடைத்துவிடும். இது நீண்ட தொலைவு பயணிக்கும் ரயில்களில் செல்ல முக்கிய நகரங்களின் புகா் பகுதிகள் அல்லது தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பயனளிக்கும். ஒருவேளை காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணச்சீட்டு உறுதி செய்யப்படாவிட்டால், மாற்று ஏற்பாடுகளை செய்ய கூடுதல் நேரத்தை இது வழங்கும்.

பயணச்சீட்டு முன்பதிவு முறை நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு நிமிஷத்துக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இது தற்போது ஒரு நிமிஷத்துக்கு முன்பதிவு செய்யப்படும் 32,000 பயணச்சீட்டுகளுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகம்.

இருக்கையை தோ்வு செய்ய முடியும்: இந்தப் புதிய முறை மூலம், தங்களுக்கு எந்த இருக்கை வேண்டும் என்ற விவரத்தை பயணிகள் தெரிவிக்க முடியும் என்பதுடன், கட்டண அட்டவணையையும் பாா்க்க முடியும். வரும் ஜூலை 1 முதல் ஆதாா் இணைக்கப்பட்ட பயனா்கள் மட்டுமே ஐஆா்சிடிசி வலைதளம் மற்றும் கைப்பேசி செயலி மூலம், தத்கால் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் மாற்றமா? எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை!

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலா... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு! என்னென்ன கேள்விகள் கேட்கப்படலாம்?

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியின் முதல்கட்டமாக, நாடு முழுவதும் வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணியானது தொடங்கவிருக்கிறது.இரண்டாம் கட்டமாக... மேலும் பார்க்க

உ.பி.யில் வாக்குவாதத்தில் காவலரை சுட்டுக்கொன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்

உத்தரப் பிரதேசத்தில் வாக்குவாதத்தின்போது காவலரை அரசுப் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்ஹேடா கிராமத்திற்கு விடுமுறையில் வீட்டிற்கு வந்த கா... மேலும் பார்க்க

ஓமனில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து: மீட்புப் பணியில் இந்திய கடற்படை!

ஓமனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்திய கடற்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமனின் ஷினாஸ் துறைமு... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: 14 பேர் காயம்

தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் திங்கள்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 14 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தயாரிக்கும் ஆலை... மேலும் பார்க்க

கேரள மாநில காவல்துறை தலைவராக ரவாடா சந்திரசேகர் நியமனம்

கேரளத்தின் புதிய காவல்துறை தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரவாடா சந்திரசேகரை நியமிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க