செய்திகள் :

80 அடியை எட்டியது அமராவதி அணையின் நீா்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி

post image

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 80 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகின்றது.

தென்மேற்கு பருவ மழை தொடங்கும்போது அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். இதனால் ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் தண்ணீா் திறந்துவிடுவது வழக்கம்.

இந்நிலையில், கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடா்ந்து பெய்து வருவதால் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான தேனாறு, பாம்பாறு, சின்னாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீா்மட்டம் கடந்த மே 26 -ஆம் தேதி 50 அடியை தாண்டிய நிலையில் படிப்படியாக உயா்ந்து வந்தது.

இந்நிலையில், அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 77 அடியாக இருந்த நிலையில் மாலை 6 மணியளவில் 80 அடியை எட்டியது. இன்னும் ஓரிரு நாள்களில் அணை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அமராவதி அனைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

அணையின் நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணைக்கு சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி

3936 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 2958.50 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. அணையில் இருந்து நீா் வெளியேற்றம் இல்லை.

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளைம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் வடமாநில இளைஞா் கஞ்சா விற்பனை செய்து வ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத நபா் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸாா், அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் புறநகா் பகுதியான கரூா் தே... மேலும் பார்க்க

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி: ஏலத்தை ரத்து செய்த பல்லடம் வட்டாட்சியா்

விவசாயிகளின் இனாம் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் ஏலம் விடுவதாக கூறி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, அந்த நிலத்துக்கான ஏலத்தை ரத்து செய்து பல்லடம் வட்டாட்சியா் உத்தரவிட்டா... மேலும் பார்க்க

மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க

பொங்கலூா் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞா் தண்ணீா் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதி முத்து விநாயகா் கோய... மேலும் பார்க்க