செய்திகள் :

``88 வயதில் தெருவை சுத்தம் செய்யும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி" - ஆனந்த் மஹிந்திராவின் பதிவு வைரல்!

post image

1964-ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர் இந்தர்ஜித் சிங் சித்து. தற்போது இவருக்கு 88 வயது ஆகிறது. இந்த வயதிலும் காலை 6 மணி முதல் சண்டிகர் நகரை தூய்மை செய்யும் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை செய்கிறார். இவர் தொடர்பான காணொளியை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ``எனக்கு பகிரப்பட்ட இந்த கிளிப் சண்டிகரின் ஸ்ரீ இந்தர்ஜித் சிங் சித்துவைப் பற்றியது. சண்டிகரின் செக்டார் 49-ன் அமைதியான தெருக்களில், தினமும் காலை 6 மணிக்கு, இந்த 88 வயதான ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி தனது சேவையைத் தொடங்குகிறார்.

ஒரு சைக்கிள், அசைக்க முடியாத கடமை உணர்வைத் தவிர வேறு எதுவும் இல்லாமல், அவர் மெதுவாக நகர்ந்து, சாலையோரத்தில் இருந்து குப்பைகளை எடுக்கிறார்.

சண்டிகர் ஸ்வச் சுரேக்ஷன் எனும் பட்டியலில் இடம் பெற்றதில் அவர் மகிழ்ச்சியடையவில்லை. புகார் செய்வதற்குப் பதிலாக, அவரே நடவடிக்கையில் இறங்குகிறார். வயதையோ, அங்கீகாரத்தையோ பொருட்படுத்தாமல் அர்த்தத்துடன் வாழ்வதில் ஒரு நம்பிக்கை.

இளமையும் வேகமும் பெரும்பாலும் வெறித்தனமாக இருக்கும் உலகில், இவரின் அமைதியான ஆனால் நிலையான அடிச்சுவடுகள், ஒருவரின் இலக்கு எப்போதும் ஓய்வு பெறுவதில்லை, சேவைக்கு எப்போதும் வயது முக்கியமில்லை என்பதை நமக்குச் சொல்கின்றன. இந்த அமைதியான போர்வீரனுக்கு ஒரு சல்யூட்." எனப் பகிர்ந்திருக்கிறார்.

US: சிலந்தி கடித்ததால் சிறுநீரகம் செயலிழப்பு; உயிருக்கு போராடும் 16 வயது சிறுவன்!

அமெரிக்காவின் அயோவாவில் 16 வயது சிறுவனுக்கு சிலந்தி கடித்து தொற்று ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அயோவாவின் ஸ்லேட்டர் பகுதியைச் சேர்ந்த நோவா ஜான்ச... மேலும் பார்க்க

Sundar Pichai: சொத்து மதிப்பு 9000 கோடியாக உயர்வு; வியக்க வைக்கும் சுந்தர் பிச்சையின் வளர்ச்சி!

ஆல்பபெட் தலைமைச் செயல் அதிகாரியான (ceo) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக கடந்த 2015-ல் பொறுப்பேற்ற சுந்தர் பி... மேலும் பார்க்க

"ரூ.5000 டு ரூ.46 லட்சம் சம்பளம்; என் அம்மாதான் எனக்கு ஹீரோ" - தாயின் தியாகம் குறித்து நெகிழும் மகன்

தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயர்ந்திருப்பதாகவும், தன்னுடைய இந்த வளர்ச்சியில் தனது... மேலும் பார்க்க

`கையெழுத்துக்காக அறையில் பூட்டி கட்டாயப்படுத்தினர்!' - கரிஷ்மா கபூர் முன்னாள் கணவரின் தாயார் புகார்!

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு லண்டனில் காலமானார். அவர் மறைவை தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கம்பெ... மேலும் பார்க்க

Zepto: மறைமுக கட்டணமா? - `COD டெலிவரியில் இதான் நடக்கிறது' - மார்க்கெட்டிங் நிபுணர் சொல்வதென்ன?

பிரபல விரைவு வர்த்தக தளமான ஜெப்டோ, கேஷ் ஆன் டெலிவரி (COD) ஆர்டர்களில் மறைமுகமாக கட்டணம் விதிப்பதாகவும், இதை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெங்களூருவைச... மேலும் பார்க்க

மும்பை: தொடர் ரயில் குண்டுவெடிப்பு; 12 குற்றவாளிகளை விடுவிக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 180 பேர் வரை உயிரிழந்தனர். 700 பேர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க