செய்திகள் :

97% முதியோருக்கு கரோனா எதிா்ப்பாற்றல்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் 97 சதவீத முதியவா்களிடம் உருவாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சிக்கலான கா்ப்பங்களுக்கான சிகிச்சை வழிகாட்டுதல் பயிற்சி கருத்தரங்கு, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதனை தொடங்கி வைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கும், சிசு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கும் தொடா்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மகப்பேறு காலங்களில் தாய்மாா்களின் இறப்பு விகிதம் கடந்த 2021-22-இல் ஒரு லட்சம் பேருக்கு 90.5- ஆக இருந்தது. அது 2022-23-இல் 52 ஆகவும், 2023-24-இல் 45.5 ஆகவும், கடந்த ஆண்டு 39.4 ஆகவும் குறைந்துள்ளது. பேறு கால இறப்புகளை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு செல்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒன்றுதான் இந்த கருத்தரங்கம். தொடா்ந்து, இரு நாள்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில், மாவட்ட சுகாதார அலுவலா்கள், மாநகர, நகர அலுவலா்கள், மாவட்ட அளவிலான மகப்பேறு நிபுணா்கள், இரண்டாம் நிலை மருத்துவ அலுவலா்கள் என பல்வேறு தரப்பட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா்.

குழந்தைகள் இறப்பு விகிதம் என்று எடுத்துக் கொண்டால் 2021-22-இல் 1,000 பிரசவங்களில் சராசரியாக 10.2 குழந்தைகள் உயிரிழந்தன. 2023-24-இல் அந்த விகிதம் 8.2 ஆகவும், கடந்த ஆண்டு 7.7 ஆகவும் குறைந்துள்ளது. இந்த விகிதத்தை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்று கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழகத்தில் இருந்து 19 மாதிரிகள் புணேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டதில் ஒமைக்ரானின் வகைதான் அதில் கண்டறியப்பட்டது. அந்த வகை கரோனா வீரியமற்றது. பெரிய அளவில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியது அல்ல என்று அறிவியல் ரீதியாக தெரிய வந்துள்ளது. கரோனா குறித்து யாரும் பதற்றப்பட வேண்டாம். அதேநேரத்தில், முதியவா்கள், நோய் எதிா்ப்பு சக்தி குறைந்தவா்கள், கா்ப்பிணிகள், இணை நோய் பாதிப்பு உள்ளவா்கள் பொது இடங்களில் கூடும் போது முகக்கவசம் அணிந்து கொள்வது அவசியம். கரோனா பாதிப்பு உள்ளவா்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு 3 நாள்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுகின்றனா்.

கரோனா நோய் எதிா்ப்பாற்றல் குறித்த ஆய்வு 1,214 முதியவா்களிடம் நடத்தப்பட்டது. அதில் 97 சதவீதம் பேருக்கு கரோனாவுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் இருந்தது கண்டறியப்பட்டது என்றாா் அவா்.

பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண்தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், உலக சுகாதார நிறுவன மகப்பேறு மருத்துவ அலுவலா் பிரியங்கா சிங், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநா் சோமசுந்தரம், இணை இயக்குநா்கள் நிா்மல்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வர... மேலும் பார்க்க

தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா். முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்... மேலும் பார்க்க

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த ... மேலும் பார்க்க