செய்திகள் :

ADMK : அதிமுக கொடி, ஜெயலலிதா பெயர், படம்... டிடிவி தினகரனுக்கு எதிரான மனுவை வாபஸ் வாங்கிய எடப்பாடி!

post image

அதிமுக-வின் கறுப்பு, வெள்ளை கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவை பயன்படுத்த டிடிவி தினகரனுக்கு தடை விதிக்க கோரி சென்னை நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற்றுக் கொண்டார்.

அதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த டி.டி.வி தினகரன் கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அப்பொழுது அதிமுகவின் கொடியைப் போன்று கருப்பு வெள்ளை சிவப்பு நிறங்களை கொடியும், அதன் நடுவே ஜெயலலிதா புகைப்படமும் பயன்படுத்தியிருந்தார்.

டி.டி.வி. தினகரன்
டி.டி.வி. தினகரனின் 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' தொடக்க விழா

இதையடுத்து சென்னை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரனுக்கு எதிராக அப்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

கூட்டணி... வாபஸ்?

அதில், ஜெயலலிதா பெயர், அவரது புகைப்படம், அதிமுகவின் கட்சி கொடியில் உள்ளது போல் கறுப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு நேற்று சென்னை 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.பி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது எடப்பாடி பழனிசாமி தரப்பில் வக்கீல் கவுதம்குமார், டிடிவி தினகரன் தரப்பில் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜாராகினர்.

ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில், இந்த வழக்கை திரும்ப (வாபஸ்)பெறுவதாகவும், இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை திரும்ப (வாபஸ்) அனுமதித்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

அதிமுக தற்பொழுது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ள நிலையில் டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வக்பு : `புதிய நடவடிக்கைகள் கூடாது..!’ - இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உச்ச நீதிமன்றம் அதிரடி

வக்பு திருத்த சட்டத்தை நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் வெற்றிகரமாக நிறைவேற்றியது மத்திய அரசு.இந்த சட்டத்திற்கு எதிராக 90க்கும் அதிகமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய... மேலும் பார்க்க

`கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற வேண்டும்' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன... மேலும் பார்க்க

வக்பு : `தனக்கு எதிரான வழக்கை தானே விசாரிப்பதற்கு சமம்’ - உச்ச நீதிமன்ற விசாரணையில் நடப்பது என்ன?

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் உள்ளிட்ட 6 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்நாட்டில் இருந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ... மேலும் பார்க்க

`பாதிக்கப்பட்ட பெண்களைப் புண்படுத்தும் கருத்துகள்' - அலகாபாத் நீதிமன்றத்தை விளாசிய உச்ச நீதிமன்றம்!

நாட்டின் மிகப் பழமையான நீதிமன்றங்களுள் ஒன்றான அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருந்து வெளிப்படும் சமீபத்திய அவதானிப்புகள் பலவும் பெண்கள் மீது உணர்வில்லாத கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பதாக அதிருப்தி தெரிவித்த... மேலும் பார்க்க

டாஸ்மாக் : `முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்க..!’ - அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம்... மேலும் பார்க்க

நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல்; ஒரே பிளேடின் 3 துண்டுகள் - 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

மும்பையில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டிற்குள் நுழைந்த திருடன், சைஃப் அலிகானை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டான். திருட வந்த நபர் சைஃப் அலிகானின் முதுகு பகுதியில்... மேலும் பார்க்க