செய்திகள் :

Bengaluru: சிறுமிக்கு கட்டாய திருமணம்; வர மறுத்ததால் தூக்கிச்சென்ற மணமகன்... போக்சோவில் கைது

post image

நாட்டில் வடமாநிலங்களில் இன்னும் குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் அதிக அளவில் நடக்கும் சிறார் திருமணங்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. நேற்று பெங்களூருவில், சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள மலைக்கிராமத்தில் 7-வது வகுப்பு வரை படித்துவிட்டு மேற்கொண்டு படிக்காத நிலையில், 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

அதே பகுதியில் உள்ள கழிகுத்தை என்ற மலைப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்ற 29 வயது கூலித்தொழிலாளிக்கு, அந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். திருமணத்திற்கு அந்த சிறுமி மறுத்தும் பெற்றோர் அதை கேட்கவில்லை.

இத்திருமணம் பெங்களூருவில் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு 14 வயது சிறுமி தனது கணவருடன் பெற்றோர் வீட்டிற்கு வந்தார். பெற்றோர் வீட்டிற்கு வந்த பிறகு தனது கணவருடன் அவரது வீட்டிற்கு செல்ல மறுத்தார். பெற்றோர் எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள். ஆனால் கேட்கவில்லை. இதனால் மாதேஷ் 14 வயது மனைவியை தனது இரு கையிலும் தூக்கிச்சென்றார்.

அச்சிறுமியின் கூக்குரல் பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரிய வில்லை. மாதேஷுடன் அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் வந்தனர். மாதேஷ் அப்பெண்ணை வயல்வெளியில் தூக்கிச்சென்றதை அங்கு நின்றவர்கள் தங்களது மொபைலில் வீடியோ எடுத்தனர்.

சிறுமியை கையில் தூக்கி செல்லும் மணமகன்

சிலர் அதனை தங்களது சோசியல் மீடியாவிலும் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மைனர் சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் மாதேஷ் மற்றும் அவரது சகோதரர் மல்லேஷ் மற்றும் மைனர் சிறுமியின் தந்தை, தாயார் நாகம்மா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மைனர் சிறுமி தற்போது தனது பாட்டி வீட்டில் இருக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். பெண்களுக்கு 18 வயதுக்கு குறைவான வயதில் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.

``அரசியல், ரியல் எஸ்டேட் பேச இங்கு இடமில்லை..'' வைரலாகும் உணவகத்தின் அறிவிப்பு! -என்ன காரணம்?

உட்கார்ந்து சாப்பிடும் உணவகங்களை நாம் தேடி போவதற்கான காரணமே, உணவைத் தாண்டி அங்கு அமர்ந்து பல விஷயங்கள் குறித்து உரையாடுவதுதான். டீக்கடையில் தான் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை பல விஷயங்கள் குறி... மேலும் பார்க்க

Bodybuilder Bride: மணப்பெண் அலங்காரத்துடன் வந்த பாடிபில்டர்... யார் இந்த சித்ரா புருஷோத்தமன்?

கர்நாடகாவைச் சேர்ந்த பாடிபில்டர் பெண்ணின் திருமண தோற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பாரம்பரியம் மற்றும் வலிமை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்தும் வகையில், சித்ரா புருஷோத்தமன் என்ற பாடிபில்டர் தனது த... மேலும் பார்க்க

கோடியில் பரிசளித்து மாமியாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மருமகள்... எங்கே, ஏன் தெரியுமா?

மாமியாரின் 50-ஆவது பிறந்த நாளை மருமகள் கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷுக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த ... மேலும் பார்க்க

``அம்மா தற்கொலை முயற்சி செய்யவில்லை...'' - காரணம் சொல்லும் பாடகி கல்பனாவின் மகள்!

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் அவரது ஹைதராபாத் இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மரு... மேலும் பார்க்க

Tamannaah: தமன்னா - விஜய் வர்மா 2 ஆண்டுகள் காதல் தோல்வியில் முடிந்ததா..?

தமிழ் படங்களில் அதிக அளவில் நடித்து வந்த நடிகை தமன்னா பாட்டியா சமீப காலமாக பாலிவுட் மற்றும் வெப்சீரியஸ்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனால் தமிழ் சினிமா பக்கம் அவரை அதிகமாக காணமுடிவதில்லை. கடந்... மேலும் பார்க்க

நெல்லை: கோயில் திருவிழா.. இருதரப்பு பிரச்னையால் அன்னதான பாத்திரங்களை அப்புறப்படுத்திய காவல்துறை!

நெல்லை பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் சொக்கலிங்க சுவாமி கோயில் மற்றும் அய்யா வைகுண்டர் பதி அமைந்துள்ளது.இந்தக் கோயிலில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பிடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது த... மேலும் பார்க்க