செய்திகள் :

BJP: நன்கொடை பெறுவதில் பாஜக முதலிடம்; ஒரே ஆண்டில் ரூ.4,340 கோடி; மற்ற கட்சிகள் பெற்றது எவ்வளவு?

post image

தேர்தல் நன்கொடை பத்திரங்களை பா.ஜ.க கூட்டணி அரசு அறிவித்த பிறகு பா.ஜ.க-விற்கு கிடைக்கும் நன்கொடை பல மடங்கு அதிகரித்தது. பா.ஜ.க-விற்குக் கிடைத்த நன்கொடையில் சொற்ப அளவு மட்டுமே காங்கிரஸ் கிடைத்துள்ளது. கடந்த 2023-24 ஆம் ஆண்டுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் எவ்வளவு நன்கொடை கிடைத்திருக்கிறது என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டுள்ளது.

அத்தகவலில் நன்கொடையில் வழக்கம்போல் பா.ஜ.கவே முன்னிலையில் இருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கொடுத்துள்ள தகவலில் பா.ஜ.க 4,340.47 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 83.85 சதவீதம் அதிகமாகும். இதில் பா.ஜ.க 50.96 சதவீதம் அதாவது 2,211.96 கோடியை மட்டுமே செலவு செய்துள்ளது.

தேர்தல் பிரசாரம்

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,225.12 கோடி நன்கொடையாகக் கிடைத்திருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 171 சதவீதம் அதிகமாகும். காங்கிரஸ் தான் நன்கொடையாக வாங்கிய தொகையில் ரூ.1025.25 கோடியைச் செலவு செய்துவிட்டது. இரு கட்சிகளும் பெற்ற நன்கொடையில் பெரும்பாலான பகுதி தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு 4507.56 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளன. இதில் தேசியக் கட்சிகள் 55.99 சதவீதம் நன்கொடை நிதியைப் பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ. 167 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி ரூ. 22 கோடியை நன்கொடையாகப் பெற்று, ரூ. 34 கோடியைச் செலவு செய்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் முந்தைய ஆண்டு பெற்ற நன்கொடையை விட 2023-24ம் ஆண்டில் பெற்ற தொகை குறைவாகும். சுப்ரீம் கோர்ட் தேர்தல் பத்திர திட்டத்தைத் தற்போது ரத்து செய்துவிட்டது. அரசியல் கட்சிகளை மிரட்டி பா.ஜ.க தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அம்மனுக்களை விசாரித்துத் தேர்தல் பத்திரங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

``காளியம்மாள் கட்சியிலிருந்து வெளியேற முழு சுதந்திரம் இருக்கிறது" - சீமான் ஓப்பன் டாக்

தமிழ்நாட்டில் இன்று நாம் தமிழர் கட்சி என்று சொன்னால் சீமானுக்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் முகங்களில், கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முக்கியமானவர். இவ்வாறிர... மேலும் பார்க்க

"2026 சட்டமன்றத் தேர்தல் சிரமமாக இருக்கும்..." - திமுகவுக்கு பெ.சண்முகம் கொடுக்கும் மெசேஜ் என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை ராஜவீதி பகுதியில் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “மத்திய அமைச்ச... மேலும் பார்க்க

NEP: "நீங்கள் வந்து வளர்ப்பீர்கள் எனத் தமிழ் கையேந்தி நிற்கவில்லை" - மத்திய அரசைச் சாடிய முதல்வர்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பணிக்காக நேற்றும், இன்றும் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் ரூ.1,476 கோடி... மேலும் பார்க்க

FBI-ன் இயக்குநர்; இந்திய வம்சாவளி; பகவத் கீதை வைத்து பதவிப் பிரமாணம் - யார் இந்த Kash Patel?

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை (kash-patel) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார்.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவ... மேலும் பார்க்க

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் விவகாரம்: "வீடியோக்களை நீக்குக" - எக்ஸ் தளத்துக்கு ரயில்வே நோட்டீஸ்

புது டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பாக வெளியான 285 வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. எக்ஸ் தளத்தில் இக்கோரிக்கை வைத்து... மேலும் பார்க்க

"என்னைச் சாதாரணமாக நினைக்காதீர்; உத்தவ் அரசையே கவிழ்த்தவன்..." - முற்றும் ஷிண்டே - பட்னாவிஸ் மோதல்!

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியிலிருந்து விலக ஏக்நாத் ஷிண்டே மறுத்தார். ஆனால் பா.ஜ.க அவரைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலகச் செய்த... மேலும் பார்க்க